Skip to main content
ஒரு காதலின் முளை



நாம்
வகுப்பினுள்
இருக்கும்போதெல்லாம்
நான் என்னை
உன் மூலமாகவே
உணர்ந்திருக்கிறேன் !
அதுபோல
நீயும் உன்னை
என் மூலமாக
உணர்ந்திருப்பாய் !

தோழிகளுடன்
எதிரே வருகையில்
நீ தலைகுனிந்து சென்றாலும்
உன் சிவந்த கன்னங்கள்
காட்டிக் கொடுக்கின்றன !
தொலைவில் வரும்போதே
என்னைப்பார்த்து ரகசியமாய்ப்
புன்னகைத்திருக்கிறாய் என்பதை !


பேருந்தில்
நான் உன்னைப்
பார்த்துக் கொண்டேயிருந்தேன் !
நீயும் மௌனமாக
அனுமதித்துக் கொண்டேஇருந்தாய் !
திடீரென்று
ஒரே நொடியில்
ஒட்டுமொத்தமாக
என்னைப் பார்த்துவிட்டு
உனக்கான நிறுத்தத்தில்
இறங்கிச் சென்றாய் !
அதிர்ச்சியில்
எனக்கான நிறுத்தத்தில்
நான் இறங்காமல்
இரண்டு நிறுத்தங்கள்
தள்ளியே இறங்கினேன் !


நம் பார்வைகள்
சங்கமிக்கும் போது
உண்டாகும்
மின்சாரத்தைச் சேமிக்க
உடனடியாக ஒரு கருவி
செய்யச்சொல்லி
அரசாங்கத்திற்கு
ஆலோசனை தரலாம்
என்றிருக்கிறேன் நான் !
என்ன சொல்கிறாய் நீ ?


உண்மையைச்சொல் !
ஒருநாள்
வகுப்பிற்குத் தாமதமாய்
வந்து திட்டு வாங்கினேன் என்று
அடுத்த நாள்
நீயும் தாமதமாய் வந்து
திட்டு வாங்கியது
எனக்காகத்தானே ?


கலைந்த
உன் கூந்தலை
விரல்களால் நளினமாக நீ
ஒதுக்கிக் கொள்வதைப்
பார்ப்பதிலேயே
போதும் போதும் எனும்படி
போதை கிடைப்பதால்
நண்பர்களுடன் மதுவருந்துவதை
நாசுக்காக மறுத்துவிடுகிறேன் !


எப்போதோ
உன்னிடமிருந்து வாங்கிய
உன் எழுதுகோலில்
இப்போதும் உணர்கிறேன்
உன் உள்ளங்கையின்
வெப்பத்தை !


நேற்று
உன்னிடம்
என் காதலைச்
சொல்லித்தீர்த்ததில்
சொல்லி வைத்தது போல
கொட்டித் தீர்த்தது மழை !
இன்று ,
வரும் வழியில்
புதிதாகப் பூத்திருந்த
ஒரு ரோஜாவைப் பார்த்ததும்
நம்பிக்கை வந்துவிட்டது
நீ கட்டாயம்
சம்மதம் சொல்லப்போகிறாய் என்று !!!




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...