Skip to main content
ஒரு காதலின் முளை



நாம்
வகுப்பினுள்
இருக்கும்போதெல்லாம்
நான் என்னை
உன் மூலமாகவே
உணர்ந்திருக்கிறேன் !
அதுபோல
நீயும் உன்னை
என் மூலமாக
உணர்ந்திருப்பாய் !

தோழிகளுடன்
எதிரே வருகையில்
நீ தலைகுனிந்து சென்றாலும்
உன் சிவந்த கன்னங்கள்
காட்டிக் கொடுக்கின்றன !
தொலைவில் வரும்போதே
என்னைப்பார்த்து ரகசியமாய்ப்
புன்னகைத்திருக்கிறாய் என்பதை !


பேருந்தில்
நான் உன்னைப்
பார்த்துக் கொண்டேயிருந்தேன் !
நீயும் மௌனமாக
அனுமதித்துக் கொண்டேஇருந்தாய் !
திடீரென்று
ஒரே நொடியில்
ஒட்டுமொத்தமாக
என்னைப் பார்த்துவிட்டு
உனக்கான நிறுத்தத்தில்
இறங்கிச் சென்றாய் !
அதிர்ச்சியில்
எனக்கான நிறுத்தத்தில்
நான் இறங்காமல்
இரண்டு நிறுத்தங்கள்
தள்ளியே இறங்கினேன் !


நம் பார்வைகள்
சங்கமிக்கும் போது
உண்டாகும்
மின்சாரத்தைச் சேமிக்க
உடனடியாக ஒரு கருவி
செய்யச்சொல்லி
அரசாங்கத்திற்கு
ஆலோசனை தரலாம்
என்றிருக்கிறேன் நான் !
என்ன சொல்கிறாய் நீ ?


உண்மையைச்சொல் !
ஒருநாள்
வகுப்பிற்குத் தாமதமாய்
வந்து திட்டு வாங்கினேன் என்று
அடுத்த நாள்
நீயும் தாமதமாய் வந்து
திட்டு வாங்கியது
எனக்காகத்தானே ?


கலைந்த
உன் கூந்தலை
விரல்களால் நளினமாக நீ
ஒதுக்கிக் கொள்வதைப்
பார்ப்பதிலேயே
போதும் போதும் எனும்படி
போதை கிடைப்பதால்
நண்பர்களுடன் மதுவருந்துவதை
நாசுக்காக மறுத்துவிடுகிறேன் !


எப்போதோ
உன்னிடமிருந்து வாங்கிய
உன் எழுதுகோலில்
இப்போதும் உணர்கிறேன்
உன் உள்ளங்கையின்
வெப்பத்தை !


நேற்று
உன்னிடம்
என் காதலைச்
சொல்லித்தீர்த்ததில்
சொல்லி வைத்தது போல
கொட்டித் தீர்த்தது மழை !
இன்று ,
வரும் வழியில்
புதிதாகப் பூத்திருந்த
ஒரு ரோஜாவைப் பார்த்ததும்
நம்பிக்கை வந்துவிட்டது
நீ கட்டாயம்
சம்மதம் சொல்லப்போகிறாய் என்று !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர