Skip to main content
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி

காற்றெனும்
சமுத்திரத்தில் வாழும்
மீன்களென
மீன்கள் நம்மை
நினைத்துக் கொண்டிருக்கலாம் !
ஆனால்
எந்த மீனும்
இங்கே வந்து
மீன் பிடிப்பதில்லை !

===============================

உங்கள் முன்பு
தென்படும்
நம்பிக்கை
என்ற கூட்டில்
எந்தப் பறவையாவது
வாழ்ந்து கொண்டிருக்கலாம் !
உண்மை என்ற
கல்லெறிந்து விடாதீர்கள் !

===============================

அழகாயிருந்தது 
என்றாலும்
வந்து தொலைக்காமலேயே
இருந்திருக்கலாம் ,
ஏற்கனவே
யாரோ எழுதிவிட்டது
போலத் தோன்றிய
நானெழுதிய
அந்தக் கவிதை !

===============================

சுவையாக இருப்பது
போன்ற
பிரமையைத் தருகின்றன
சூடாக இருக்கும்
உணவுகள் !

===============================

மருத்துவனாவேன்
என்றான் ஒருவன் !

பொறியாளனாவேன்
என்றான் ஒருவன் !

விஞ்ஞானியாவேன்
என்றான் ஒருவன் !

விவசாயியாவேன்
என்றான் ஒருவன் !

நான்
ஓடிச்சென்று
அந்த வருகால விவசாயியைக்
கட்டிப்பிடித்து
கண்ணீர் சிந்தினேன் !

நாளையவன்
வளர்க்கப் போகும்
நெற்கதிருக்கு
என் கண்ணீர்
உரமாகட்டும் !

================================

ஒற்றை பிராமணனும்
ஒரு விதவையும்
எதிரெதிரே
கடந்து போனார்கள் !
திகைத்து நின்றது
சகுனம் !

===============================

வெகுநாளைக்கப்புறம்
கண்ணில் தட்டுப்பட்டது
ஒரு
பட்டாம்பூச்சி !
அநேகமாக
எங்கள் தெருவின்
கடைசி பட்டாம்பூச்சியாக
அது இருக்கலாம் !

===============================

- குருச்சந்திரன்

Comments

  1. வணக்கம்
    அழகியபொருட்சுவை நிறைந்த கவி கண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்கள் வருகையிலும் கருத்திலும் கூட மிக்க மகிழ்ந்தேன் ரூபன் ! நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர