அவன்
சிறையில் இருந்து
வெளிப்பாட்டான் !
அவனுக்கு
அன்று
விடுதலை !
குற்றம் ?
நிதி
அவனை
மோசடி செய்தது !
எனவே
நிதியை
அவன்
மோசடி செய்தான் !
பலநாள் திருடன்
ஒருநாள்
அகப்படுவான் !
இவன் ,
சிலநாள் திருடன்
சீக்கிரம்
அகப்பட்டான் !
வாதாட
இவனிடம்
நிதியில்ல்லை !
எனவே
நீதி வென்றது !
சிறை,
இவனுக்கு ஆனது
அறை !
ஆறுவருடம்
சிறையில்
வனவாசம் !
இப்போது
தண்டனை முடிந்து
மீண்டும் இவனுக்கு
ஜனவாசம் !
வெளியே
வெயிலடித்தது !
அடுக்கிவிட்டது போல்
கட்டிடங்கள் !
முடுக்கிவிட்டது போல்
வாகனங்கள் !
இவன்
வீடுசென்ற போது
சகோதரன்
செருப்ப்பைக் காட்டினான் !
தகப்பன்
தவறிவிட்டான் !
தாய்
முதியோர் இல்லத்தில் !
உறவுகள்
ஒன்றுகூடிக்
காறித்துப்பின !
அக்கம்பக்கத்தார்
அகதியைப் போலப்
பார்த்தனர் !
வேலைதேடிச்
சென்றவிடத்தில்
விரட்டியடிக்கப்பட்டான் !
அடுத்தவேளைச் சோறு
கேள்விக்குறியானது !
பிச்சையெடுப்பது குறித்து
மனதுக்குள்
பரிசீலித்தான் !
அதற்கு
சிறை செல்வதே
கௌரவம் என்று
தோன்றியது !
செய்ய
வேலை !
உண்ண
உணவு !
உடுக்க
உடை !
உறங்க
உறைவிடம் !
என்ன
தனிமை தான்
வாட்டும் !
இப்போதுமட்டும் என்ன
வாழுகிறதாம் !
இப்படியாக
இரண்டு நிமிடங்கள்
யோசித்தவன்
பக்கத்திலிருந்தவன்
பணப்பையைப்
பிடுங்கிக் கொண்டு
வேகமாக
ஓடத் தொடங்கினான் !
அவன் நோக்கம்
திருடுவது அல்ல !
சிறை செல்வது !!!
நல்லவனையும் சமூகம் மாற்றிவிடுவது கொடுமை! சிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி நண்பா
ReplyDelete