Skip to main content
 சிறைவாசி





அவன்
சிறையில் இருந்து
வெளிப்பாட்டான் !

அவனுக்கு
அன்று
விடுதலை !

குற்றம் ?

நிதி
அவனை
மோசடி செய்தது !

எனவே

நிதியை
அவன்
மோசடி செய்தான் !

பலநாள் திருடன்
ஒருநாள்
அகப்படுவான் !

இவன் ,

சிலநாள் திருடன்
சீக்கிரம்
அகப்பட்டான் !

வாதாட
இவனிடம்
நிதியில்ல்லை !
எனவே
நீதி வென்றது !

சிறை,
இவனுக்கு ஆனது
அறை !

ஆறுவருடம்
சிறையில்
வனவாசம் !
இப்போது
தண்டனை முடிந்து
மீண்டும் இவனுக்கு
ஜனவாசம் !

வெளியே
வெயிலடித்தது !

அடுக்கிவிட்டது போல்
கட்டிடங்கள் !
முடுக்கிவிட்டது போல் 
வாகனங்கள் !

இவன்
வீடுசென்ற போது

சகோதரன்
செருப்ப்பைக் காட்டினான் !

தகப்பன்
தவறிவிட்டான் !

தாய்
முதியோர் இல்லத்தில் !

உறவுகள்
ஒன்றுகூடிக்
காறித்துப்பின !

அக்கம்பக்கத்தார்
அகதியைப் போலப்
பார்த்தனர் !

வேலைதேடிச்
சென்றவிடத்தில்
விரட்டியடிக்கப்பட்டான் !

அடுத்தவேளைச் சோறு
கேள்விக்குறியானது !

பிச்சையெடுப்பது குறித்து
மனதுக்குள்
பரிசீலித்தான் !

அதற்கு
சிறை செல்வதே
கௌரவம் என்று
தோன்றியது !

செய்ய
வேலை !

உண்ண
உணவு !

உடுக்க
உடை !

உறங்க
உறைவிடம் !

என்ன
தனிமை தான்
வாட்டும் !

இப்போதுமட்டும் என்ன
வாழுகிறதாம் !

இப்படியாக
இரண்டு நிமிடங்கள்
யோசித்தவன்

பக்கத்திலிருந்தவன்
பணப்பையைப்
பிடுங்கிக் கொண்டு 
வேகமாக
ஓடத் தொடங்கினான் !

அவன் நோக்கம்
திருடுவது அல்ல !
சிறை செல்வது !!!





Comments

  1. நல்லவனையும் சமூகம் மாற்றிவிடுவது கொடுமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...