Skip to main content

மனிதன் என்பவன் .............







ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !

குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !

பக்கத்துவீட்டுக் குழந்தை
வீறிட்டழுதது !

இருசக்கர வாகனமொன்று
சேறிறைத்தது !

எதிரில் வந்தவன்
காறி உமிழ்ந்தான் !

கழிவுநீர் ஊர்தி
கடந்து போனது !

எவனோ
எவனையோ திட்டிய
கெட்டவார்த்தை
காற்றுவாக்கில்
காதில் வந்தது !

இனவிருத்தியில்
இரு நாய்கள் !

தள்ளுவண்டியில்
மாட்டிறைச்சி !
பக்கத்தில்
பன்றியிறைச்சி !

குடித்துவிட்டு
ஒருவன்
வாந்தியெடுத்தான் !

கோவிலில்
வாங்கிய பூ
வாடியிருந்தது !

ஒரு
கிழிந்த நோட்டு
கைக்கு வந்தது !
சில்லறை இல்லையாம் !

நுழையும்போதே
வலதுகால்
தடுக்கியது !

போடாத காசிற்குப்
பிச்சைக்காரி
சபித்து அனுப்பினாள் !

உள்ளே
கொடுங்கூட்டம் !

வாங்கிய விளக்கில்
திரியைக் காணவில்லை !

வரிசையில்
ஒருவன்
காலை மிதித்தான் !

கொடுத்த தேங்காய்
அழுகிவிட்டது !

தரிசனம் காணும்போது
தலைகள் மறைத்தன !

ஒற்றும்போது
கற்பூரம்
அணைந்தது !

அந்தக்கிழிந்த நோட்டை
அய்யர்
கூப்பிட்டுத்
திருப்பிக் கொடுத்தார் !

பாதி வரிசையில்
பிரசாதம் தீர்ந்தது !

வெளியே வந்தால்
செருப்பைக் காணவில்லை !

அணையாதிருந்த
துண்டுபீடி
காலைச்சுட்டது !

அறைக்கு வந்தால்
மின்சாரமில்லை !

இவையெல்லாம் நடந்து
ஆறுநாட்கள் கழித்து ....................

ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !

குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !

காரணம்,
மனிதன் என்பவன்
பழக்கத்திற்கு
அடிமைப்பட்டவன் !








Comments

  1. ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகளை அனுபவித்தும், திரும்ப அங்கு செல்லத்தோன்றுகிறது என்றால் அதற்குக்காரணம் ’மனிதன் என்பவன்
    பழக்கத்திற்கு அடிமைப்பட்டவன் !’ என்று சொல்லியுள்ளீர்கள்.

    இருக்கலாம். இருப்பினும் அதில் பழக்கத்துக்கு அடிமையானதைத் தவிர வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது போலல்லவா தெரிகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வேறு எதோ ஈர்ப்பும் உள்ளது ! அதைச் சொல்லத்தெரியவில்லை. கருத்திற்கு மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete

  3. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  4. தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி ஐயா ! மற்றபடி இந்த ஆண்டும் மற்ற எல்லா ஆண்டுகளைப்போல வெறுமனே கடந்து போகப்போகிறது அவ்வளவுதான் !

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர