Skip to main content

திருமணம் 2013 




 

' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
--------------------------------------------

அஷ்டமச்சனியாம் !
முப்பது
முடிய வேண்டுமாம் !
ஜென்ம குருவாம்
ஒருவருடம்
போக வேண்டுமாம் !
அடுத்து வரும்
ராகு தசையோ
பதினெட்டு வருடமாம் !
அட ஆண்டவா !!!!!!!!!!
--------------------------------------------

படித்துக்
கொண்டிருக்கும் பெண்
வரனாய் வந்தால் ........
பெற்றோர்களே உஷார் !
--------------------------------------------

பஜ்ஜி சொஜ்ஜி
தின்று விட்டு
பாட்டு கேட்டு
வந்தது
அந்தக்காலம் !
நேர்முகத்தேர்வொன்றை
நடுவீட்டில் சந்தித்து
நாக்குத்தள்ளி
வந்தது
இந்தக்காலம் !
--------------------------------------------

திருமண அகராதியில்
நம்பிக்கை துரோகம்
என்பதன் பொருள்
புத்திசாலித்தனமான
தேர்ந்தெடுப்பு !
--------------------------------------------

இந்தியாவின்
மாப்பிள்ளைக் களஞ்சியங்கள்
எனப்படுவவை -----------------------

விடை : சாப்ட்வேர் நிறுவனங்கள் !
--------------------------------------------

கனவு காணாதே !
பெண் பார்த்து
நிச்சயிக்கப்பட்டு
தாலி கட்டி
திருமணம் முடிந்து
முதலிரவும்
முடிந்தால் தான்
அவள் உன்
மனைவி !
--------------------------------------------

பல்லைப் பிடித்துப்
பார்த்துத்தான்
மாப்பிள்ளை
வாங்கப்படுகிறது !
--------------------------------------------

முகநூலின்
காதலெல்லாம்
திருமணத்தில்
சேர்த்தியில்லை !
--------------------------------------------

திருமணத்திற்கு
முன்பான
ஒரு பழைய காதலில்
எல்லாம் இருந்ததாம்
எல்லை மட்டும்
தாண்டவில்லையாம் !
இதுதானய்யா
இந்தஊர்
கற்பு !
--------------------------------------------

பெண்பாவம்
பொசுக்கிவிடும் !
ஆண்பாவம்
இன்னொரு ஆணுக்கு
வாழ்க்கை தரும் !
--------------------------------------------

அப்போதும்
இப்போதும்
சுயம்வரம்
ஆணுக்கு நடந்ததாய்
சரித்திரமுண்டோ ?
--------------------------------------------

ஆண்
வயதுக்கு
வந்தாலும்
இனி
சடங்கு நடத்தலாம் !
--------------------------------------------

முப்பது கடந்து
முடி கொட்டி
தொப்பை வந்து
சுமார் மூஞ்சி
சுமார் சம்பள
ஆணாய் நீயிருந்தால் ..........
ஸாரி நண்பா !
better luck to next ஜென்மம் !!!








Comments

  1. இன்றைய நாட்டு நடப்புகளை நயம்படச்சொல்லும் அருமையான ஆக்கம்.

    //better luck to next ஜென்மம் !!!//

    சூப்பரான எதிர்பாரா முடிவு. ;)

    ReplyDelete
    Replies
    1. இக்கால நிகழ்வு அப்படித்தான் இருக்கிறது ஐயா ! உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி !

      Delete
  2. வரதட்சணைக் கொடுமை வாட்டுது பெண்களை என்றால்
    இது உச்சக் கொடுமை! எங்கு போய் உரைப்பது சொல்!

    நீங்கள் உதிர்த்த ஒவ்வொன்றும் அத்தனை பெறுமதியானவை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. உயிரோட்டமான தங்கள் கருத்து இந்தக்கவிதையின் உயிரோட்டத்தை மேலும் அதிகரிக்கிறது தோழி ! நன்றி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர