Skip to main content

அழைப்பு வருமா ?

அழைப்பு வருமா ?



இரண்டு நாட்களாகி விட்டன !
இன்றாவது அழைப்பு வருமா ?
இனிமையை அழைத்து வருமா ?

எங்கிருந்து
என்கிறீர்களா ?
வேறு எங்கிருந்து ?
வீட்டில் இருந்துதான் !

என்றாவது ஓர்நாள்
வீடு அழைக்கும்,
வரன் பார்த்திருப்பார்கள்,
வரச் சொல்வார்கள்
விதி மாறப் போகிறது
வேதனை தீரப் போகிறது !
 -  என்று நான்
காத்திருக்கிறேன் !
காத்துக் கொண்டேயிருக்கிறேன் !

அப்பா,
வேலையைப் பற்றியே
கேட்கிறார் !
அம்மாவோ
உணவு உண்ட
வேளையைப் பற்றியே
கேட்கிறாள் !
" வேறு சங்கதி உண்டா ? "
என்று நானும்
பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் !
நாடகமாகவாவது
நல்லது சொல்வார்கள் என்று !
ம்ஹூம்...
ஒரு ஆணியும்
பெயரவில்லை !
ஒரு அணுவும்
அசையவில்லை !

இந்தக் காலப்
பெண்கள் இருக்கிறாள்களே !
அம்மம்ம்மா !
அப்பப்ப்ப்பா !
அய்யய்யோ !

ஆர்யா போல வேண்டுமாம் !
சூர்யா போல வேண்டுமாம் !
அவனைப் போல வேண்டுமாம் !
இவனைப் போல வேண்டுமாம் !

ஜவுளிக் கடையில்
குவிந்து கிடக்கும்
ஆடையைத்
தேடுவது போலத்தான்  - தனக்கான
ஆடவனையும்
தேடத் தலைப்படுகிறாள்
இங்கு ஒவ்வொரு பெண்ணும் !

பகட்டானது மட்டுமே
பக்குவமாய்
விலைபேசப் படுகிறது !

இங்கு,
முன்னுரிமை எல்லாம்
மென்பொருள் மேதைகளுக்கே !

அமெரிக்கவாசிகளுக்கு
ஆரவார வரவேற்பு !

சம்பளம்
ஆறு இலக்கமா ?
சாதி தடையில்லை !

முக்கியமாக,
தமிழனாக இருந்தால்
தமிழ் தெரியக்கூடாது !

உயர்நிலைப் பள்ளி தாண்டாத
உத்தமி ஒருத்தி
அறைகூவல் விடுக்கிறாள்,

" மனமுவந்து
மணப்பதென்றால்
மருத்துவனையே
மணப்பேன் ! "

" பொறிவைத்துப்
பிடித்தாலும்
பொறியாளனையே
பிடிப்பேன் ! "

" எழிலதிபனாயினும் - அவன்
தொழிலதிபனாயிருந்தால்
இப்போதே ஒகே ! "


பெண்ணுக்கு
ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட
மூன்று விட்ட
சித்தப்பா மகன் சொல்கிறான்,
" மணமகனுக்கு
புருவம் அடர்த்தியில்லை
புறக்கணித்து விடு ! "

ஏழுவிட்ட
எட்டு விட்ட
அத்தை மகள் சொல்கிறாள்,
"  மாப்பிள்ளைக்கு
மூக்கு நீளமில்லை
மறுத்துவிடு ! "

- இதில்
இந்த அக்கப்போருகள் வேறு !






காலன் அழைப்பதற்குள்ளாவது
காமன் வந்து அழைப்பானா ?

மரண ஓலை வருவதற்குள்ளாவது
மணமாலை கிட்டுமா ?

ஆனாலும்
ஆனாலும்

இதோ
இரண்டு நாட்களாகிவிட்டன
வீட்டிலிருந்து அழைப்பு வரும்
என்று
நான் ....இல்லையில்லை
நாங்கள் காத்திருக்கிறோம்
காத்துக்கொண்டே இருக்கிறோம் !!!


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர