அழைப்பு வருமா ?
இரண்டு நாட்களாகி விட்டன !
இன்றாவது அழைப்பு வருமா ?
இனிமையை அழைத்து வருமா ?
எங்கிருந்து
என்கிறீர்களா ?
வேறு எங்கிருந்து ?
வீட்டில் இருந்துதான் !
என்றாவது ஓர்நாள்
வீடு அழைக்கும்,
வரன் பார்த்திருப்பார்கள்,
வரச் சொல்வார்கள்
விதி மாறப் போகிறது
வேதனை தீரப் போகிறது !
- என்று நான்
காத்திருக்கிறேன் !
காத்துக் கொண்டேயிருக்கிறேன் !
அப்பா,
வேலையைப் பற்றியே
கேட்கிறார் !
அம்மாவோ
உணவு உண்ட
வேளையைப் பற்றியே
கேட்கிறாள் !
" வேறு சங்கதி உண்டா ? "
என்று நானும்
பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் !
நாடகமாகவாவது
நல்லது சொல்வார்கள் என்று !
ம்ஹூம்...
ஒரு ஆணியும்
பெயரவில்லை !
ஒரு அணுவும்
அசையவில்லை !
இந்தக் காலப்
பெண்கள் இருக்கிறாள்களே !
அம்மம்ம்மா !
அப்பப்ப்ப்பா !
அய்யய்யோ !
ஆர்யா போல வேண்டுமாம் !
சூர்யா போல வேண்டுமாம் !
அவனைப் போல வேண்டுமாம் !
இவனைப் போல வேண்டுமாம் !
ஜவுளிக் கடையில்
குவிந்து கிடக்கும்
ஆடையைத்
தேடுவது போலத்தான் - தனக்கான
ஆடவனையும்
தேடத் தலைப்படுகிறாள்
இங்கு ஒவ்வொரு பெண்ணும் !
பகட்டானது மட்டுமே
பக்குவமாய்
விலைபேசப் படுகிறது !
இங்கு,
முன்னுரிமை எல்லாம்
மென்பொருள் மேதைகளுக்கே !
அமெரிக்கவாசிகளுக்கு
ஆரவார வரவேற்பு !
சம்பளம்
ஆறு இலக்கமா ?
சாதி தடையில்லை !
முக்கியமாக,
தமிழனாக இருந்தால்
தமிழ் தெரியக்கூடாது !
உயர்நிலைப் பள்ளி தாண்டாத
உத்தமி ஒருத்தி
அறைகூவல் விடுக்கிறாள்,
" மனமுவந்து
மணப்பதென்றால்
மருத்துவனையே
மணப்பேன் ! "
" பொறிவைத்துப்
பிடித்தாலும்
பொறியாளனையே
பிடிப்பேன் ! "
" எழிலதிபனாயினும் - அவன்
தொழிலதிபனாயிருந்தால்
இப்போதே ஒகே ! "
பெண்ணுக்கு
ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட
மூன்று விட்ட
சித்தப்பா மகன் சொல்கிறான்,
" மணமகனுக்கு
புருவம் அடர்த்தியில்லை
புறக்கணித்து விடு ! "
ஏழுவிட்ட
எட்டு விட்ட
அத்தை மகள் சொல்கிறாள்,
" மாப்பிள்ளைக்கு
மூக்கு நீளமில்லை
மறுத்துவிடு ! "
- இதில்
இந்த அக்கப்போருகள் வேறு !
காலன் அழைப்பதற்குள்ளாவது
காமன் வந்து அழைப்பானா ?
மரண ஓலை வருவதற்குள்ளாவது
மணமாலை கிட்டுமா ?
ஆனாலும்
ஆனாலும்
இதோ
இரண்டு நாட்களாகிவிட்டன
வீட்டிலிருந்து அழைப்பு வரும்
என்று
நான் ....இல்லையில்லை
நாங்கள் காத்திருக்கிறோம்
காத்துக்கொண்டே இருக்கிறோம் !!!
இரண்டு நாட்களாகி விட்டன !
இன்றாவது அழைப்பு வருமா ?
இனிமையை அழைத்து வருமா ?
எங்கிருந்து
என்கிறீர்களா ?
வேறு எங்கிருந்து ?
வீட்டில் இருந்துதான் !
என்றாவது ஓர்நாள்
வீடு அழைக்கும்,
வரன் பார்த்திருப்பார்கள்,
வரச் சொல்வார்கள்
விதி மாறப் போகிறது
வேதனை தீரப் போகிறது !
- என்று நான்
காத்திருக்கிறேன் !
காத்துக் கொண்டேயிருக்கிறேன் !
அப்பா,
வேலையைப் பற்றியே
கேட்கிறார் !
அம்மாவோ
உணவு உண்ட
வேளையைப் பற்றியே
கேட்கிறாள் !
" வேறு சங்கதி உண்டா ? "
என்று நானும்
பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் !
நாடகமாகவாவது
நல்லது சொல்வார்கள் என்று !
ம்ஹூம்...
ஒரு ஆணியும்
பெயரவில்லை !
ஒரு அணுவும்
அசையவில்லை !
இந்தக் காலப்
பெண்கள் இருக்கிறாள்களே !
அம்மம்ம்மா !
அப்பப்ப்ப்பா !
அய்யய்யோ !
ஆர்யா போல வேண்டுமாம் !
சூர்யா போல வேண்டுமாம் !
அவனைப் போல வேண்டுமாம் !
இவனைப் போல வேண்டுமாம் !
ஜவுளிக் கடையில்
குவிந்து கிடக்கும்
ஆடையைத்
தேடுவது போலத்தான் - தனக்கான
ஆடவனையும்
தேடத் தலைப்படுகிறாள்
இங்கு ஒவ்வொரு பெண்ணும் !
பகட்டானது மட்டுமே
பக்குவமாய்
விலைபேசப் படுகிறது !
இங்கு,
முன்னுரிமை எல்லாம்
மென்பொருள் மேதைகளுக்கே !
அமெரிக்கவாசிகளுக்கு
ஆரவார வரவேற்பு !
சம்பளம்
ஆறு இலக்கமா ?
சாதி தடையில்லை !
முக்கியமாக,
தமிழனாக இருந்தால்
தமிழ் தெரியக்கூடாது !
உயர்நிலைப் பள்ளி தாண்டாத
உத்தமி ஒருத்தி
அறைகூவல் விடுக்கிறாள்,
" மனமுவந்து
மணப்பதென்றால்
மருத்துவனையே
மணப்பேன் ! "
" பொறிவைத்துப்
பிடித்தாலும்
பொறியாளனையே
பிடிப்பேன் ! "
" எழிலதிபனாயினும் - அவன்
தொழிலதிபனாயிருந்தால்
இப்போதே ஒகே ! "
பெண்ணுக்கு
ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட
மூன்று விட்ட
சித்தப்பா மகன் சொல்கிறான்,
" மணமகனுக்கு
புருவம் அடர்த்தியில்லை
புறக்கணித்து விடு ! "
ஏழுவிட்ட
எட்டு விட்ட
அத்தை மகள் சொல்கிறாள்,
" மாப்பிள்ளைக்கு
மூக்கு நீளமில்லை
மறுத்துவிடு ! "
- இதில்
இந்த அக்கப்போருகள் வேறு !
காலன் அழைப்பதற்குள்ளாவது
காமன் வந்து அழைப்பானா ?
மரண ஓலை வருவதற்குள்ளாவது
மணமாலை கிட்டுமா ?
ஆனாலும்
ஆனாலும்
இதோ
இரண்டு நாட்களாகிவிட்டன
வீட்டிலிருந்து அழைப்பு வரும்
என்று
நான் ....இல்லையில்லை
நாங்கள் காத்திருக்கிறோம்
காத்துக்கொண்டே இருக்கிறோம் !!!
Comments
Post a Comment