குற்றவுணர்ச்சி
மழை பெய்த ஒரு
மாலை நேரம் !
மாடத்தில் தந்தை ,
சூடத்தில் தாய் ,
பாடத்தில் பையன் , - சமையல்காரி
வேடத்தில் மனைவி ,
கூடத்தில் நான் !
மழைக்கு இதமாய்
மிளகாய் பஜ்ஜி !
பொதுஅறிவுப் பாடம்
படித்துக்கொண்டிருந்த
பிள்ளையின் ,
" புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று
சத்தத்தைக் குறைவாய் வைத்து
" செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் !
தொலைக்காட்சிப்பாவை
பரபரப்பான செய்தியொன்றை
புன்னகை கலையாமல்
வாசித்தாள் !
எந்தநாட்டிலோ பூகம்பமாம் !
இறந்தவர்களின் எண்ணிக்கை
எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் !
புலன்களைக் கூர்மையாக்கி ,
புத்தியின் இடுக்குகளில்
பள்ளிச்சிறுவன் போல
புள்ளிவிபரங்களை
அள்ளி அடுக்கிக்கொண்டேன் !
நாளை அலுவலகத்தில்
மதியஉணவின் பொது
" தொட்டுக்கொள்ள "
சுவையான செய்தி
சுடச்சுடத் தயார் !
இப்போது
பூகம்பத்தின்
மாட்சிகளை விளக்கும்
காட்சிகளைக் காண்பித்தது
தொலைகாட்சி !
மூன்று வயதுக்குழந்தை
அதனுடைய மொழியில்
அம்மாவென்று அலறியபடி
இறந்து கிடந்த
பெண் ஒருத்தியை
எழுப்பும் முயற்சியில்
தோற்றுக்கொண்டிருந்தது !
அக்காட்சியின் கோரம் கண்டு
என் இதயத்தின் ஓரத்தில்
ஒளிந்திருந்த ஈரம் ,
கண்ணீர்த்துளியாகக்
கண்களில் திரையிட்டது !
அதற்குமேல்
சாப்பிடப்பிடிக்காமல்
மீதம் வைத்த
மிளகாய் பஜ்ஜியை
மொய்த்துக்கிடந்தது
குறுகுறுப்பான குற்றவுணர்ச்சி !!!
மழை பெய்த ஒரு
மாலை நேரம் !
மாடத்தில் தந்தை ,
சூடத்தில் தாய் ,
பாடத்தில் பையன் , - சமையல்காரி
வேடத்தில் மனைவி ,
கூடத்தில் நான் !
மழைக்கு இதமாய்
மிளகாய் பஜ்ஜி !
பொதுஅறிவுப் பாடம்
படித்துக்கொண்டிருந்த
பிள்ளையின் ,
" புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று
சத்தத்தைக் குறைவாய் வைத்து
" செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் !
தொலைக்காட்சிப்பாவை
பரபரப்பான செய்தியொன்றை
புன்னகை கலையாமல்
வாசித்தாள் !
எந்தநாட்டிலோ பூகம்பமாம் !
இறந்தவர்களின் எண்ணிக்கை
எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் !
புலன்களைக் கூர்மையாக்கி ,
புத்தியின் இடுக்குகளில்
பள்ளிச்சிறுவன் போல
புள்ளிவிபரங்களை
அள்ளி அடுக்கிக்கொண்டேன் !
நாளை அலுவலகத்தில்
மதியஉணவின் பொது
" தொட்டுக்கொள்ள "
சுவையான செய்தி
சுடச்சுடத் தயார் !
இப்போது
பூகம்பத்தின்
மாட்சிகளை விளக்கும்
காட்சிகளைக் காண்பித்தது
தொலைகாட்சி !
மூன்று வயதுக்குழந்தை
அதனுடைய மொழியில்
அம்மாவென்று அலறியபடி
இறந்து கிடந்த
பெண் ஒருத்தியை
எழுப்பும் முயற்சியில்
தோற்றுக்கொண்டிருந்தது !
அக்காட்சியின் கோரம் கண்டு
என் இதயத்தின் ஓரத்தில்
ஒளிந்திருந்த ஈரம் ,
கண்ணீர்த்துளியாகக்
கண்களில் திரையிட்டது !
அதற்குமேல்
சாப்பிடப்பிடிக்காமல்
மீதம் வைத்த
மிளகாய் பஜ்ஜியை
மொய்த்துக்கிடந்தது
குறுகுறுப்பான குற்றவுணர்ச்சி !!!
Comments
Post a Comment