Skip to main content
குற்றவுணர்ச்சி





மழை பெய்த ஒரு
மாலை நேரம் !

மாடத்தில் தந்தை ,
சூடத்தில் தாய் ,
பாடத்தில் பையன் , - சமையல்காரி
வேடத்தில் மனைவி ,
கூடத்தில் நான் !

மழைக்கு இதமாய்
மிளகாய் பஜ்ஜி !

பொதுஅறிவுப் பாடம்
படித்துக்கொண்டிருந்த
பிள்ளையின் ,
" புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று
சத்தத்தைக் குறைவாய் வைத்து
" செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் !

தொலைக்காட்சிப்பாவை
பரபரப்பான செய்தியொன்றை
புன்னகை கலையாமல்
வாசித்தாள் !

எந்தநாட்டிலோ பூகம்பமாம் !
இறந்தவர்களின் எண்ணிக்கை
எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் !

புலன்களைக் கூர்மையாக்கி ,
புத்தியின் இடுக்குகளில்
பள்ளிச்சிறுவன் போல
புள்ளிவிபரங்களை
அள்ளி அடுக்கிக்கொண்டேன் !

நாளை அலுவலகத்தில்
மதியஉணவின் பொது
" தொட்டுக்கொள்ள "
சுவையான செய்தி
சுடச்சுடத் தயார் !

இப்போது
பூகம்பத்தின்
மாட்சிகளை விளக்கும்
காட்சிகளைக் காண்பித்தது
தொலைகாட்சி !

மூன்று வயதுக்குழந்தை
அதனுடைய மொழியில்
அம்மாவென்று அலறியபடி
இறந்து கிடந்த
பெண் ஒருத்தியை
எழுப்பும் முயற்சியில்
தோற்றுக்கொண்டிருந்தது !

அக்காட்சியின் கோரம் கண்டு
என் இதயத்தின் ஓரத்தில்
ஒளிந்திருந்த ஈரம் ,
கண்ணீர்த்துளியாகக்
கண்களில் திரையிட்டது !

அதற்குமேல்
சாப்பிடப்பிடிக்காமல்
மீதம் வைத்த
மிளகாய் பஜ்ஜியை
மொய்த்துக்கிடந்தது
குறுகுறுப்பான குற்றவுணர்ச்சி !!!


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர