Skip to main content

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது .
மழைக்குடை இல்லாத நான்
நிழற்குடையில் ஒதுங்கினேன்.
சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை ,
ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் .
நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள்
நின்றிருந்தாள் .
பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை
எனக்குத தெரிந்தது .
அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன்
நல்லவேளை மணமாக வில்லை
என மனதும் ரணமாக வில்லை .
நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள்.
இன்னும் பார்தேன் சிவந்தாள்.
என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது .
இதயம் இடியாய்த துடித்தது
எங்கள் பார்வைகள் உரசியதில்
மின்னல் தெறித்தது .
அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் .
என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .
என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது .
சற்றே கண்ணீர் வந்தது .
அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே
வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் ,
" அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று .
அதை கேட்டதும்
உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது
போல உணர்ந்தேன் .
மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் .
அந்த மழையில் இப்போது உயிர் இல்லை .
அது செத்துப பெய்து கொண்டிருந்தது .







Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர