Skip to main content
எங்கே எனது பழைய விதி






எனக்கு என்னவாயிற்று ?

எல்லாம் மாறிவிட்டதோ ?


காலையில் யாரும்

என்னை எழுப்ப வில்லை .


கசங்கியிருந்த போர்வை

ஒரு குறையாய்த் தோன்றவில்லை !


கேட்காமலேயே அம்மா

காபி கொடுத்தாள் !


சேர்ந்து சாப்பிட

தங்கை அழைத்தாள்


அப்பாவின் பார்வையில்

அதிசயமாய்

அன்பு இருந்தது !


வெளியே வந்தேன் .

என்னை வரவேற்க

வானவில்லின்

வளையம் இருந்தது !


சிறிது நடந்தேன்

பூக்களின்

பாதை தெரிந்தது !


ஒரு சிறுமி வந்தாள்

இனிப்பு கொடுத்தாள்

அவளுக்குப் பிறந்தநாளாம் !

எனக்கும் தானோ ?


சாலையில் நடந்தேன்

குறும்பாய்ப் பார்த்தபடி

கன்னி ஒருத்தி

கடந்து சென்றாள் .


எவர் குழந்தையோ

என்னைப் பார்த்து

வெள்ளையாய்ச் சிரித்தது !


கேட்காமலேயே

காசு கொடுத்தேன்

பிச்சைக்காரன் புன்னகைத்தான் .


வேலைக்காக

விண்ணப்பித்தேன்

அஞ்சல்காரன் ஆசீர்வதித்தான் !


பாழாய்ப்போன

என் பழைய விதியைத்

தேடினேன் .

கடைசி வரை

கிடைக்க வில்லை !


என்ன மாயம் நடந்தது ?


அட ,


நேற்றுத்தான்

அவளிடம்

என் காதலைச் சொல்லி இருந்தேன் .

அவளும்

அழகாய்ச் சிவந்து

சம்மதம் என்றிருந்தாள்.


பாருங்களேன் ,

எனது

இந்தப் புலம்பலும்

ஒரு கவிதையாய் மாறிவிட்ட

அதிசயத்தை !!!









Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது