Skip to main content
காமத்தின் கடைசி எல்லை



அந்த வருடத்தை ,

அந்த மாதத்தை ,

அந்த நாளை ,

அந்த நிமிடத்தை ,

அந்த வினாடியை ,

அந்த கணநேரத்தை ,

மறக்கவா முடியும் ?


கல்லூரி வாழ்வின்

கடைசி நாள் .

நம்

மூன்று வருடக் காதலுக்கு

முடிசூட்டு விழா

அன்று தான் நடந்தது !


விளக்கில்லாத

வகுப்பறையில்

வசமிழந்த வசதியில்

நாம் மட்டும்

தனித்திருந்தோம் !


வெளியே பெய்த மழை

நமக்குள்ளும் !


நம் கண்களைத்

தழுவ விட்டதில்

தவழ்ந்து வந்தது

காமக் குழந்தை !


மழை பெய்தாலும்

அறையினுள்

அதிசய நிசப்தம் .

நமக்குள்ளே

விரகத்தின் சத்த !


நாம்

கைகளால்

முடிச்சுப் போட்டதில்

கற்பு கட்டவிழ்ந்தது !


உன் பெருமூச்சை

என் கழுத்தில்

பாய்ச்சினாய் !

ஓராயிரம் எரிமலையை

ஒரு சேர உணர்ந்தேன் !


உன் கண்களுள்

நுழைந்து

உனதுள்ளம் தொட்டேன்

நீயும் பதிலுக்குத் தொட்டாய் !


அது ,

ஒருவழிப்பாதை போலும் ,

வெளியேற வழியின்றி

தவித்துக்கிடந்தோம்

இருவரும் !


நாம்

ஒன்றிக்கலந்ததில்

நம்மிடையே

காற்றுக்கும் கட்டுப்பாடு !


நாம்

இணைந்து இழைந்ததில்

நம்முடைய

நாணங்களின் தட்டுப்பாடு !


நீ

போதும் என்றாய்

நான்

போதாது என்றேன்


நான்

வேண்டும் என்றேன்

நீ

வேண்டாம் என்றாய் !


விலகி விலகியே

விட்டுக்கொடுத்தாய் !


உயிர் மாற்று

அறுவை சிகிச்சையை

நாம் உதடுகளால்

நிகழ்த்தினோம் !


மன்மதப்பாதையில்

முத்தங்களால் பயணித்தோம் !


காமத்தின்

கடைசி எல்லையில்

காதலைக் கண்டோம்

மீண்டு வந்தோம் !


மழை

முடிந்த பொது

எல்லாம்

வடிந்தது !


விலகி அமர்ந்தோம் !


ஒருவரின்

உயிரை

ஒருவர்

உணர்ந்தபடி

பார்த்துக்கொண்டே இருந்தோம்

நாம்

பார்த்துக்கொண்டே இருந்தோம் !










Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது