Skip to main content
ஒரு பிரிவும் சில இதயங்களும் ......



ஒரு மாலை நேர மந்தகாச தனிமையில்

நாம் மறுபடி சந்தித்தோம் .


நான் வழக்கமாக புன்னகைத்தேன்

நீ மாறாக மௌநித்தாய் .


என்னை அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டே ,

அந்த அழைப்பிதழை நீட்டினாய் .


அதில் , உன் பெயருக்குப்பக்கத்தில்

எவன் பெயரோ இருந்தது .


நான் அவஸ்த்தையாய் " ஏன் " என்றேன் ,

நீ அமைதியாய் " யதார்த்தம் " என்றாய் .


என்னிடம் இருந்த உன் இதயத்தை

நீ பிடுங்கிகொண்டதில் ,


உன்னிடம் இருந்த என் இதயம்

துடிப்பை நிறுத்தி இருந்தது .


அவனது புகைப்படம் காட்டினாய்

மாதச்சம்பளம் ஐந்து இலக்கம் என்றாய் .


கடைசியில் , நம் நான்கு வருட காதலை

நாசூக்காய் விற்றிருந்தாய் .


சிப்பந்தி வந்தான் . உன் அனுமதியுடன்

உனக்கான பணத்தையும் சேர்த்தே கொடுத்தேன்

ுகமாய் இருந்தது .


பிரியும் போது சொன்னாய்

" திருமணத்திற்கு வந்து விடாதே " என்று .

நான் வறட்சியாய் புன்னகைத்தேன் .


ஒரு சில நிமிடங்கள்

நாம் மௌனமாய் அமர்ந்திருந்தோம்

அது தான் நாம் நம் காதலுக்கு செலுத்திய

இறுதி அஞ்சலி .


தெருவில் நடந்து கொண்டிருந்தேன்

தள்ளுவண்டியில் கம்பளி ஆடை விற்றுக்கொண்டிருந்தார்கள்

அப்பாவுக்கு குளிர் தாங்காது என வாங்கிக்கொண்டேன் .


சிறிது தொலைவு நடந்ததில்

அம்மாவின் ஞாபகம் வந்து

ஆப்பிள் பழங்களை வாங்கினேன் . விரும்பி சாப்பிடுவாள் .


அடுத்த மாத சம்பளத்தில்

பள்ளி செல்லும் தம்பிக்கு ஒரு

மிதிவண்டி வாங்க முடிவெடுத்தேன்

பாவம் நடந்தே செல்கிறான் .


என் பழைய காதலியே ,

ஒரு வகையில் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் .


உன் பிரிவால் , என்னைச்சுற்றியுள்ள

பிற இதயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டேன் .




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது