Skip to main content

நான் அருகதை அற்றவன்




நான் கனவுகள் விற்பவன்


கவிதையின் காதலன்


காதலின் கவிஞன்


சிலர் என்னை


கலைக்கிறுக்கன் என்கின்றனர் !



மோனைகளை முடுக்கி விட்டு


எதுகைகளை எடுத்தெறிந்து


வார்த்தைகளோடு விளையாடுவது


என் வியாபார வாடிக்கை !



நாயகனுக்கும் நாயகிக்கும்


ஊடல் என்றால்


நான்


கவலையோடு கூடல் கொள்கிறேன் !



அவர்கள் தழுவலுக்கு


நான் நெகிழ்கிறேன்


அவர்களின் கண்ணீருக்கு


நான் அழுகிறேன் !



சில நேரங்களில் நான் ,


மெட்டுக்குள்


முடங்கி விடுவதால் - என்னை


மொழியின் கொலைஞன்


என்போரும் உண்டு !



எனக்கும் ஒரு கூட்டம்


இருப்பதை நம்பவே முடியவில்லை


என்னை ரசிக்கும்


அவர்களின் ரசனைக்கு


நானும் ரசிகன் !



நான் கலைச் சேவகன் அல்ல .


மது குடித்த


மாலைப் பொழுதுகளில்


மல்லாந்து படுத்து


மதியைப் பார்த்தால் தான்


வரிகள் விளைந்து


கவிகள் கனிகின்றன !



சில நேரங்களில்


நான் திருட்டுக் கயவன் .


காவியங்களின்


காதல் ரசங்களைக்


களவாடிக் கவி செய்வதால்


" கற்பனையின் உச்சன் " என்று


போற்றப்படுபவன் !



என்னை


தமிழன்னையின்


தவப் புதல்வன் என்கின்றனர் .


அவளின் பாதங்களைத்


தொடக்கூட நான்


அருகதை அற்றவன் எனும்


அவலத்தை வெளியே தெரியாமல்


மறைத்துக்கொள்வதில் உள்ளது


என் வெற்றியின் ரகசியம் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது