Skip to main content
குறிப்பு : இக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்


ஆதலால் காதல் செய்வீர்



பேருந்து நிறுத்தத்தில்

பேருந்துக்காகக் காத்திருந்தேன் !


என்னைத் தவிர அங்கே ,

இரண்டு சிட்டுக்குருவிகள்

இருந்தன !

ஒன்று ஆண் !

இன்னொனொன்று பெண் !


இரண்டும்

என்னைப் பார்த்து

எதோ பேசிக்கொண்டன !

அநேகமாகத் திட்டியிருக்கலாம் !

"கூடிப்பேசிக் கூடல் செய்வதைக்

கெடுக்க வந்த கயவன் ! " - என்றிருக்கலாம் !


நான் சுரணையற்று

நின்றிருந்தேன் !


அப்போதுதான்

எங்கிருந்தோ அவள் வந்தாள் !

சுற்றுப்புறத்தில்

சுகந்தம் வீசியது !


கடைந்தெடுத்த சந்தனத்தின் அம்சம் அவள் !

வடிவான அரபுக்குதிரை வம்சம் அவள் !


செதுக்கிய தேகத்தில்

பாகங்கள் பதுக்கப்பட்டிருந்தன !


கச்சிதமான கண் மை !

உறுத்தாத உதட்டுச்சாயம் !


நெகிழ்ந்தாலும்

சேலை நேர்த்தியாய் இருந்தது !


இடுப்பு உடுக்கை

போலிருந்தாலும்

பாங்கான மடிப்பு

படுக்கைக்கு அழைத்தது !


கண்ணின் விழிகள்

காமத்தின் மொழி பேசின !


உதட்டு மச்சம் - அது

உணர்ச்சியின் உச்சம் !


முகத்தில்

மன்மதக் கடலையே

குடிவைத்திருந்தாள் !


காமத்தின் கலையை

பேசாமல் பேசினாள்

மோகத்தின் வலையை

வீசாமல் வீசினாள் !


மொத்தத்தில் கட்டழகி !

மன்மத மொட்டழகி !


அவளின்

அருகாமைக் கதகதப்பில்

உருகியபடியே

உறைந்து கொண்டிருந்தேன் !


முப்பதின் முதிர்ச்சி

முகத்தில் இருந்தாலும் - என்

இளமைக்கு இன்ப அதிர்ச்சியை

அயராது தந்துகொண்டிருந்தாள் !


கற்றை முடியைக் கோதியபடி

ஒற்றைப் பார்வையை வீசினாள் !


அந்தப் பார்வையில்

ஒரு " அழைப்பு " இருந்தது !

என் வாலிபம் மலைத்து நின்றது !


அவள் ,

புடவையை சரிசெய்வது போல

பாகங்களைப் படையலிட்டாள் !

கழுத்தை வருடியபடி

காமத்தைக் கடைவிரித்தாள் !


கீழுதட்டைக் கடித்து

பல்லிடுக்கில் கசிய விட்டாள் !


யம்மா ..........


உப்பி உப்பி வெடிக்கப்போகும்

ஊதப்பட்ட பலூனாய்

காமக் கொந்தளிப்பில் ,

தேகம் தத்தளித்தேன் !


சத்தியமாக

என் வசத்தில் நான் இல்லை !


அவள் எங்கே

அழைத்தாலும் ,

வாலைச் சுருட்டியபடி

பின்னாலேயே போகும்

நாயின் நிலையில்தான்

நான் நின்றிருந்தேன் !


அப்போது பார்த்து

அலைபேசி அதிர்ந்தது !


சே ! காதலி கூப்பிடுகிறாள் !


"என்ன " என்றேன்

எடுத்தவுடன் !


இனியவள் ,

இனிமையை இரண்டால் பெருக்கி

" என்ன செய்கிறாய் ? " என்றாள் !


நான்

நக்கலை நான்கால் பெருக்கி

" சிரைத்துக் கொண்டிருக்கிறேன் " என்றேன் !


" ஏதாவது கோபமா ?

நான் பிறகு அழைக்கிறேன் " என்றாள்

ஏமாற்றத்தை எட்டால் வகுத்தபடி !


அவள் பாவம்

என்று தோன்றியது !


" இரு இரு ......... என்ன சொல் ? " என்றேன்

புறக்கணிப்பை பத்தால் வகுத்தபடி !


" சும்மாதான் " என்ற

செல்ல சினேகிதி சிரித்துவிட்டாள் !


அதுவரையிருந்த காமம்

அப்போது கழுவப்பட்டது !


இதற்குள்

நடுத்தர வயதுக்காரன் ஒருவன்

நிறுத்தத்தினுள் நுழைந்தான் !


மந்தாகினி இப்போது

என்னை விட்டு

அவனைப் பார்க்க ஆரம்பித்தாள் !


பிடித்த காதலியுடன்
பேச்சு வளர வளர
மனிதனாய் இருந்தவன்
புனிதனாய் மாறிப் போனேன் !


காலம் கடந்த போது ,

பட்சி ,

கட்சி மாறிப் பறந்து போனது !


நான் என்னவளுடன்

பேசிக்கொண்டே இருந்தேன் !


" நல்லவேளை " என்று

நினைத்துக் கொண்டேன் !


இறுதியாக

ஒன்றே ஒன்றை மட்டும்

சொல்லிக்கொள்கிறேன் !


வாலிபம் என்பது வங்கக்கடல் !

ஆசைகள், ஆவேச அலைகள் !

காதல் , காப்பாற்றும் கடவுள் - அதுமட்டுமே

கரை சேர்க்கும் கப்பல் !


ஆதலால்

காதல் செய்வீர் !!!










Comments

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...