Skip to main content
காதலியே கேள் .....



காதலியே கேள் !

இனிமேல் நாம்

மழையில் நனைய வேண்டாம் !

அமுத மழை இப்போதெல்லாம் ,

அமிலத்தை அணிந்துதான்

தரையையே தொடுகிறது !


வடுகப்பட்டிக் கவிஞன் சொன்னானென்று ,

வானின் நிறத்தை மையாக்கி ,

காதல் கடிதம் தீட்டச் சொன்னாய் !


நானிலத்தின் கழிவுகளால் ,

நீலம் எல்லாம் நீர்த்துப்போக ,

வார்த்தையை வடிக்க

வழியின்றி விழிக்கிறேன் !


தண்ணீரை உன்னுடன்

ஒப்பிடச் சொல்கிறாய் !

குளோரின் குரூரமாகச் சிரிப்பது

கேட்கவில்லையா உனக்கு ?


மொட்டை மாடியில் ,

காற்று வாங்குவதைக் குறைத்துக்கொள்வோம் !

ஏனென்று கேட்கிறாயா?

ஹைக்கூத் தென்றலை ,

ஹைட்ரோ கார்பன் கவர்ந்து விட்டதாம் !

செய்தியை , செவிமடுக்க வில்லையா நீ ?


கணநேரமாவது ,

குளிர்ச்சியைக் குறைத்துக்கொள்வோம் !

ஓசோன் ஒருநாளாவது

ஓய்வெடுக்கட்டும் !


உந்தன் ,

பார்வையின் மின்சாரமே போதுமே !

புறவுலக மின்சாரத்தை

பத்திரப்படுத்துவோம் !


பூச்சிக்கொல்லிகள்

ஆட்சி செய்வதால் ,

பருக்கைச்சோற்றைப் பகிர்ந்து கொள்வதை

பெருமளவில் குறைத்துக்கொள்வோம் !


புகையின் பகையை ,

பூமி இனிமேலும் பொறுக்காது !

ஆகையால் ,

காலாற நடந்தே ,

காதலை அனுபவிப்போம் !


இனிமேலான இரவுகளில் ,

காற்றைத் தூது விட்டே பேசிக்கொள்ளலாம் !

கதிர்வீச்சுக்களின் கோபமூச்சு ,

கடுகளவேனும் குறையட்டுமே !!!



Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...