Skip to main content
குறிப்பு : படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்கிற அளவுக்கு இந்தக்கவிதை அப்படி ஒன்றும் பிரமாதமானது அல்ல .



படைப்பாளிகள்


நாம்

கலையின் படைப்பாளிகள் !

மொழியின் பாட்டாளிகள் !


படித்தல் ஒரு தவம் !

படைத்தல் ஒரு வரம் !


வரம் பெற

தவம் செய்ய வேண்டும் !


"சூழலை ",

சூழ்நிலை கொடுக்கும் !


சிறிது நடந்தாலே ,

சிந்தனைகள் சேர்ந்துவிடும் !


காற்றில் அலையும்

கற்பனைகளைக் கைப்பற்றவில்லை எனில் ,

கைமாறிப் போகும் அபாயம் இருக்கிறது !


இதுவும் பிரசவம் போன்றதுதான் !

இங்கே , பிரசவிப்பவனும்

புதிதாய்ப் பிறக்கிறான் !


ஒன்றிலிருந்து மற்றொன்றாய் ,

மற்றொன்றிலிருந்து வேறொன்றாய் ,

வேறொன்றிலிருந்து இன்னொன்றாய் ,

கலை எப்போதும் ,

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் !

கவலை வேண்டாம் !


மனிதராய் இருந்து ,

கடவுளின் வேலையைச் செய்வதில் ,

அன்னைக்கு அடுத்தநிலையில்

இருப்பவர்கள் நாம் !


சிலசமயங்களில் ,

நமக்குள்ளேயே பொறாமை கொள்கிறோம் !

தாயின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும்

சகோதரனின் மீதான ,

பாசப் பொறாமை அது !


முடிச்சைப் போட்டு

முடிச்சை அவிழ்க்கையில் ,

மொழியின் கடலில்

அறிவைக் கடைகையில் ,

உணரப்படும் உயிர் வேதனை ,

நமக்கு மட்டுமே பரிச்சயமானது !


அகத்தே நிகழும் போதை இது !

இதை அனுபவிக்க ,

புறபோதைகளையும் நாடுகிறோம் !

தவறொன்றுமில்லை !


இது ,

காய்ச்சலில் காணும் குளிர்ச்சி !

அவஸ்தையில் அடையும் ஆனந்தம் !

நரகத்தில் நுகரப்படும் பேரின்பம் !




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது