Skip to main content
விளையாடிப் பார்க்கலாம் வா




வாலிபா கேள் !


நீ குருடனல்ல

ருட்டில் இருக்கிறாய்

அவ்வளவு தான் !




நீ முடவனல்ல

காயம் பட்டவன் - அதை

காலம் ஆற்றி விடும்

கவலைப்படாதே !




கதவு சாத்தியிருக்கிறது என

கைகட்டி நிற்காதே !

ஒரு முறை தட்டிப் பார் !

அது பூட்டப்படாமல்

கூட இருக்கலாம் !




இரண்டு அடிகளை மட்டும்

நீயாக எடுத்து வை !

மூன்றாவது அடிக்கு

முயற்சி இல்லாமல்

முன்னேறி இருப்பாய் !




வெற்றிக்கான படிகட்டுகள்

மொத்தமே நூறு !

ஒரே ஒரு எட்டு வை !

நீ நின்றிருப்பது

தொண்ணூற்றி ஒன்பதாவது

படிகட்டாகக் கூட இருக்கலாம் !




உனது

ோகத்தின் ஈரங்கள்

ாமரைத் தண்ணீர் போல

தொலையட்டும் !

அவை தந்த

பாடத்தின் சுவடுகள்

பசுமரத்து ஆணிபோல

பதியட்டும் !




மரத்தடிகள்

இளைப்பாற மட்டுமே !

தங்குவதற்கு அல்ல .

முன்னேறி நடந்து பார்

மாளிகைக்கே மன்னனாவாய் !




காதல் என்பது

இளமையின் போதை மாத்திரை !

அதன் விலையும் அதிகம் !

விளைவுகளும் அதிகம் !

எச்சரிக்கையாய் இரு !




வெளிச்சத்தில் இருக்கும்போதே

விளக்கையும் தேடிக்கொள் !

இனிமேலும் இரவே இல்லையென்று

இயம்ப இயலாது அல்லவா !




விதி என்பது வீணர்களின் வார்த்தை !

சதி என்பது சோம்பேறியின் சாக்கு !




அறிவுரைகளை

அவ்வப்போது ஏற்றுக்கொள்

அவை அனுபவித்தவனின்

ஆசிர்வாதங்களாக இருக்கலாம் !




முயற்சியிடம் தோற்றுப்போகும்

முதல் எதிரி யார் தெரியுமா ?

விதிதான் !

வருந்தாதே !




தோள்களின் தினவில்

தரணியையே ஆளும்

தகுதி பெற்றவன் நீ !

தயங்காதே !




நீ

நெட்டி முறித்தால்

சோம்பலின் சாரம்

வெளிறிப்போகும் !




நீ

எட்டி உதைத்தால்

ஏழு உலகமும்

எகிறிப்போகும் !




உலகம் ஒரு

விளையாட்டு மைதானம் !

சோம்பேறிகள்

விதியின் பக்கம் !

சாதனையாளர்கள்

முயற்சியின் பக்கம் !

அதிர்ஷ்டமும் , அவநம்பிக்கையும்

அவர்களின் அணி !

நேர்மையும் , நம்பிக்கையும்

நமது அணி !

விளையாடிப் பார்க்கலாம் வா !!!








Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...