Skip to main content
வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?



வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?

ஒரு நிமிடம் நில் !

நான் சொல்வதைக் கேள் !

நீ யார் என்கிறாயா ?

உனது நலம்விரும்பி

என்று வைத்துக்கொள்ளேன் .

என்ன விழிக்கிறாய் !

... நலம்விரும்பி என்பது

போன நூற்றாண்டோடு

வழக்கொழிந்த வார்த்தையாயிற்றே !

சரி ! இந்த நூற்றாண்டின் இறுதியோடு

அழியப்போகும் வார்த்தையைச் சொல்கிறேன் !

நண்பன் ! என்னை உனது நண்பன்

என்று வைத்துக்கொள்ளேன் !


எங்கே போகிறாய் ?

என்னது ! உறக்கத்தின் காதலியை

வாங்கப் போகிறாயா ?

.... மதுவா ?

மது - உறக்கத்தின் காதலி !

நல்ல உவமை !

நான் ஒன்று சொல்லவா ?

உறக்கத்திற்கு மனைவி

ஒருத்தி இருக்கிறாள் !

அவள் பெயர் உழைப்பு !

கைச்சிறையில் மனைவி

காத்திருக்கும்போது ,

காதலியை கடைகளில்

ஏன் தேடி அலைகிறாய் ?


இரவெல்லாம் பணி !

அயராத உழைப்பு !

முழுச் சூரியனை

முழுதாய்ப் பார்த்தே

மாதங்கள் மூன்று ஆகின்றன !

உனது புளித்த புத்திமதிகளை

போன நூற்றாண்டு பத்தாம் பசலிகளிடம்

வைத்துக்கொள் என்கிறாயா ?


உழைப்பு என்பது

மூளையின் மடிபையும் ,

பணத்தின் தடிப்பையும்

அதிகப்படுத்துவது மட்டுமல்ல !

அது ,

வியர்வையின் சொத்து !

உடல்நலத்தின் வித்து !


உன் உடம்பின்

கடைசி வியர்வையை

நீ எப்போது பார்த்தாய் ?

என்னது அப்படி ஒன்று

இருப்பதையே மறந்துவிட்டாயா ?

பரிணாம வளர்ச்சியில் ,

மனிதனிடமிருந்து காணாமல் போகக்கூடிய

உறுப்புக்களின் பட்டியலில்

வியர்வைச்சுரப்பிக்கே முதலிடம் !

இதயத்திற்குக் கூட இரண்டாமிடம் தான் !


உடல் வருந்திச் செய்யும்

எதுவுமே உழைப்புதான் !

நின்ற இடத்திலிருந்தே ஓடு !

குதி , குனி , நிமிர் !

கைகால்களை நீட்டி மடக்கு !

இருபது நிமிடங்கள் போதும் !

அன்றிரவு உறக்கம் வரவில்லைஎன்றால் ,

செருப்பால் என்னை அடி !


அடுத்ததாக ,

உனது அம்மாவை

கடைசியாக எப்போது நினைத்தாய் ?

கணக்கிடாதே ! அது ,

கடந்த வருடமாகக் கூட இருக்கலாம் !

காதலியிடம் நொடிக்கொருமுறை

சாப்பிட்டாயா ? சாப்பிட்டாயா ? என்று

உருகுகிறாயே !

அந்த வார்த்தையை

உன் தாயிடம் எப்போதாவது

கேட்டிருக்கிறாயா ?

இந்த உலகத்தில் எப்போதும்

உன் நலனை எண்ணியபடியே

வாழ அவள் ஒருத்தியால்

மட்டுமே முடியும் !

உறக்கம் வரவில்லைஎன்றால்

அவளிடம் ஐந்து நிமிடங்கள்

மனம் விட்டுப் பேசு !

மனங்குளிர்ந்த அவள் உள்ளத்தின் பூரிப்பு ,

உன்னைத்தாலாட்டித் தூங்கவைக்கும் !


உறக்கத்திற்கும் தாய்க்கும்

என்ன தொடர்பு என்கிறாயா ?

யுகம் யுகமாய் , தாய் தன் குழந்தையை

தாலாட்டித் தானே தூங்க வைத்தாள் !

அந்தத் தாலாட்டின் அதிர்வுகள் எல்லாம்

அண்ட வெளியில் உறைந்து போய்க் கிடக்கின்றன !

எங்கெல்லாம் தாயன்பு

என்கிற கதகதப்பு உண்டாகிறதோ ,

அங்கெல்லாம் அவை உருகி உருகி

பொழியத்தொடங்குகின்றன !

இது சொல்லப்படாத ஆனால்

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை !


இதற்கு மேலும் நீ

மதுவைத் தேடித்தான் போவேன் என்றால் ,

உன் தாயிடம் ஒரு வார்த்தை

சொல்லி விட்டுப் போ !!!











Comments

  1. Uzhaippin unnathathai unarthum ithu nallathor kavithai... But it is age ji.. Antha antha vayasula manushan atha atha thedithan povan ( For Love)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது