Skip to main content
நாம் கணிணி




உலகையே
இயக்குபவர் போல்
நாம் அந்த
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்திருக்கிறோம் !

நம்
புருவமத்தியில்
சிந்தனை முடிச்சு !

கன்னக்கதுப்புகளில்
சிந்தனை இறுக்கம் !

தாடைகளில்
சிந்தனைகளின்
மெல்லிய அசைவு !

இப்படியாக .....

நம்
இன்னபிற க்களில்
சிந்தனையின்
இன்னபிற க்கள் !

உற்றுப்பார்த்தால்
நம் தலையைச்சுற்றி
ஒளிவட்டம்
தெரியலாம் !
ஒளிச்சதுரமாகவும்
அது இருக்கலாம் !

நாம்
ஜீவசமாதி
அடைந்திருக்கவில்லை
என்பதை
அவ்வப்போதான
நம் கனைப்பு
உறுதிப்படுத்திவிடுகிறது !

நாம் செய்வது
ஒரு வகையான
அறிதுயில் !

சிலபோது
நம் முகத்தில்
புன்னகை அரும்புகிறது !
அந்தப்புன்னகை

கடவுளின் புன்னகையை
ஏறத்தாழ
ஒத்திருக்கிறது ! 


அநேகமாக நாம்
மின்கட்டணம்
செலுத்திக்கொண்டிருக்கலாம் !

ஒரு
கிசுகிசுவைப்
படித்துக்கொண்டிருக்கலாம் !

வீடியோ கேம்
ஆடிக்கொண்டிருக்கலாம் !

ஆபாசப்படம்
பார்த்துக்கொண்டிருக்கலாம் !

திரையைப் பார்த்த
மேனிக்குத்
தூங்கிக்கொண்டிருக்கலாம் !

ஆனால்
அங்கேயிருந்து பார்த்தால்
நாம்
சாட்சாத்
புத்தர் தான் !
சிந்தனை வயப்பட்ட
கணிணி புத்தர் !

நமக்கு
எல்லாமே
கணிணியில் இருக்கிறது !
எல்லாமுமாக
கணிணியே இருக்கிறது !

தப்பில்லை !

கணிணி என்ற
ஜன்னல் வழியே
வேடிக்கை பார்க்கலாம்தான் !
ஆனால்
வீடு என்பது
வேடிக்கை பார்க்கமட்டும்
அல்லவே !!!









Comments

  1. வணக்கம்
    ஆனால்
    அங்கேயிருந்து பார்த்தால்
    நாம்
    சாட்சாத்
    புத்தர் தான் !
    சிந்தனை வயப்பட்ட
    கணிணி புத்தர் !
    கவிதை அருமையாக உள்ளது. ரசித்தேன்

    என்பக்கம் கவிதையாக
    எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது