Skip to main content
பிழைப்பு 




அலாரம்
அடித்தது !

திடுக்கிட்டெழுந்தேன் !

சமையலறையில்
அம்மா !

உறக்கத்தில்
அப்பா !

ஏழுமணிக்கு
எக்ஸ்பிரஸ் !

இரவல் வாங்கிய
இரவுப்பணி, 
இன்றைக்கு மட்டும் !

கொதித்த
வெந்நீர்
அளவாயச்சுட்டது !

எனக்குப்பிடித்த
எழுமிச்சம்பழ சாதம்
மணத்தது,
மதியத்திற்கு !

இரண்டு
இட்டிலிக்கு மேல்
இறங்கவில்லை !

அம்மா கொடுத்த
தேநீரில்
கூடுதலாக
சீனி !

அப்பாவை
எழுப்ப வேண்டாம்
என்றுவிட்டேன் !


 என்
அடுத்த வருகை
அநேகமாக
தீபாவளிக்கு !

காசு ஏதும்
வேண்டுமா என்றாள்
அம்மா !
இருக்கிறது
என்றேன் !

பேருந்துநிறுத்தம்
வரை
பயணப்பையைப்
பிடிவாதமாய்
வாங்கிக்கொண்டு
கூடவே வந்தாள் !

கோயமுத்தூரில்
இருந்து
ஜாதகம் வந்துள்ளதாம் !
பார்க்கவேண்டுமாம் !

கேட்டுக்கொண்டேன் !

அடுத்தமுறை
வரும்போது
கூடுதலாக 
விடுப்பு எடுத்து
வருபடி கூறினாள் !

சரியென்றேன் !

பேருந்து வந்தது !

விடைபெற்றுக்கொண்டேன் !

பேருந்துக்குள்
எனக்கொரு இருக்கை
உறுதியானதை
உறுதிசெய்த
அம்மாவின் முகத்தில்
சின்னதாய்த் திருப்தி !

ரயிலேறியதும்
போன் வரும் !

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது