Skip to main content
சுயேட்சை சின்னம்






அன்பார்ந்த
வாக்காளப் பெருமக்களே !

உலகிலேயே
எளிய சின்னம்
எங்கள் சின்னம் !

யாருக்குமே
தெரியாத சின்னம்
எங்கள் சின்னம் !

போஸ்டரே
அடிக்காத சின்னம்
எங்கள் சின்னம் !

யாரையுமே 
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !

யாருமே
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !

தேர்தல் அறிக்கையே
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !

இளைஞர்களே !

எங்கள்
சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
உங்களுக்கு ஒரு
பிகர் கிடைப்பாள் !
கேயாஸ் தியரிப்படி
அது சாத்தியமாகும் !

குடும்பத்தலைவர்களே !

எங்கள் சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
கடனில் இருந்து
விடுபடுவீர்கள் !
உங்கள் சார்பாக
நாங்கள்
சத்ரு சம்ஹார யாகத்தில்
கலந்து கொண்ட கையோடு
அப்படியே வருகிறோம்  !

வாக்காளப் பெருமக்களே !

போக்குவரத்து இடையூறு
ஏற்படுத்தாத சின்னம்
எங்கள் சின்னம் !

கையூட்டு வழங்காத
சின்னம்
எங்கள் சின்னம் !

பிரியாணி தராமல்
உங்களுக்கு
வயிற்று வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !

குவாட்டர் தராமல்
உங்களுக்கு
தலை வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !

நீங்கள்
கழிவறையில்
இருக்கும்போது
உங்கள் கதவைத்தட்டி
ஓட்டுக் கேட்காத சின்னம்
எங்கள் சின்னம் !

வாக்குப்பதிவு
இயந்திரத்தில்
கடைசியில்
வீற்றிருக்கும் சின்னம்
எங்கள் சின்னம் !
ஆகவே,
நீங்கள்
வாக்களிக்க
உங்கள் கைகளை உயர்த்தி
கலோரிகளைச்
செலவழிக்க வேண்டியதில்லை !
போனவுடன்
கடைசியில்
டபக் என்று
போட்டு விடலாம் !

வாக்காளப் பெருமக்களே !

உங்களை
மூளைச்சலவை
செய்யாத சின்னம்
எங்கள் சின்னம் !

உலகிலேயே
நல்ல சின்னம்
எங்கள் சின்னம் !

உள்ளொன்று
வைத்துப்
புறமொன்று
பேசாத சின்னம்
எங்கள் சின்னம் !

கூட்டணிக் குழப்பம்
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் ! 

புள்ளிவிபரங்களை
அள்ளிவீசாத சின்னம்
எங்கள் சின்னம் !

குட்டிக்கதைகள்
சொல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !

வாக்காளப் பெருமக்களே !

நாங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டால் 
எதுவுமே
செய்யப் போவதில்லை !
ஆகவே,
நீங்கள்
நிம்மதியாக இருக்கலாம் !

Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...