Skip to main content
அரசியல்வாதிகளே ..........

அரசியல்வாதிகளே ,
உங்கள் அறிக்கைகளில்
இலவசங்களே
இலக்காக இருப்பதால்
தொலைநோக்கு என்பது - உங்களுக்கு
தொலைந்த நோக்கு
ஆகிவிட்டது போலும் !

அரசியல்வாதிகளே ,
சமச்சீர்கல்வி போன்று
சமச்சீர்சமுதாயம் என்றொரு
சீர்மிகு கருத்தை உங்கள்
சிந்தையில் என்றாவது
சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ?

அரசியல்வாதிகளே ,
உங்களுக்கிடையேயான
ஏட்டிக்குப்போட்டியில்
எட்டி உதைக்கப்படுவதெல்லாம்
ஏதுமற்ற மக்கள்தான் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள் ?

அரசியல்வாதிகளே ,
மதுபோதை போல
மாதுபோதையும்
அரசுடைமையாக்கப்படும் என்று
ஆசைகாட்டியே நாளை
ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் !
அப்போது ,
விபச்சாரதிற்கும்
விபரமானதொரு
பட்டயப் படிப்பு வந்து
பட்டையைக் கிளப்பப்போகிறது !

அரசியல்வாதிகளே ,
" யார் செய்தார்கள் ? " என்பதைவிட
" என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே
தராசின் முள் போல உங்கள்
சிரசில் நிலை பெறட்டும் !

அரசியல்வாதிகளே ,
பேசுவதும் , கேட்பதும்
எழுதுவதும் ,
எப்போதும் சுகமானவைகள் !
அனுபவத்தின் வலி
அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் !
களத்தில் இறங்கிக்
காரியம் ஆற்றாதவரை
களங்கம் என்பது
கடைசிவரை கழுவப்படாது !
களமிறங்கும்
தைரியமில்லாத நீங்கள்
தயவுசெய்து இனிமேல்
உங்களை சிங்கங்களோடு
ஒப்பிடாதீர்கள் .
அது சிங்கங்களுக்கு அசிங்கம் !

அரசியல்வாதிகளே ,
எந்த ஆட்சி வந்தாலும்
முந்தைய ஆட்சியின்
மாட்சிகளை ,
சாட்சியின்றி அழிப்பதையே
அன்றாடக் காட்சியாய்
வைத்திருந்தால் ,
ஆண்டுகள் ஐந்து
மாண்ட போதிலும்
விண்டு கொடுக்கும் அளவுகூட
தொண்டு நடந்திருக்காது !
அடுத்த ஐந்தாண்டில்
காட்சி மாறுவது போல
ஆட்சி மாறினாலும்
பழைய கதையே
புதிய அத்தியாயமாய்த் தொடரும் !

அரசியல்வாதிகளே ,
மனிதநேயம் என்னும்
புனித நேயத்தில்
பட்டம் பயின்றவனே
சட்டம் ஒழுங்கு காக்க
சீருடை அணிய வேண்டும் - என்றொரு
திட்டம் தீட்டிடுங்கள் !
ஏனெனில் இங்கு
பலசமயங்களில் ,
பயிரை மேய்வது
வெளியிலிருந்து வரும்
'கூலிகள் ' அல்ல !
உள்ளேயே இருக்கும்
'வேலிகள் ' தான் !

அரசியல்வாதிகளே ,
கொள்ளையடிக்கவே நீங்கள்
வெள்ளையாய்ச் சிரிக்கிறீர்கள் !
ஏழைகளின் வீட்டில் நீங்கள்
உணவு உண்ணுவது கூட - உங்கள்
கனவு நிறைவேறத்தான் !
உங்கள்
'தடை' களையப்பெறவே
நடை பயணங்களை
நாடு முழுவதும்
நாடிப் போகிறீர்கள் !'
உண்மையைச் சொல்லுங்கள் .
இன்னும் எத்தனை
இருக்கின்றன
உங்கள் புத்தியில்
இதுபோன்ற 'யுத்திகள் '?

அரசியல்வாதிகளே ,
நீங்கள் கோட்டையில்
அமர்ந்துகொண்டு
எத்தனை பழங்களைத் தின்று
எத்தனை கொட்டைகள் போட்டீர்கள்
என்பதல்ல வரலாறு !
நீங்கள் போட்ட விதைகளில்
எத்தனை விதைகள்
விருட்சங்களாகி இருக்கின்றன
என்பது மட்டுமே வரலாறு !!!




Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...