Skip to main content
காதல் வந்த பிறகு ........


எப்போதும் இருக்கும்
உலகம் தான் !
இப்போது மட்டும்
நிறம் மாறித்தெரிகிறது !

எப்போதும் பார்க்கிற
மனிதர்கள்தான் !
ஆனால் அவர்களின்
மகிழ்வான தருணங்களில்
அவர்களுக்கு நான்
எதிர்படுகிறேன் !

எப்போதும் இருக்கும்
அதே அலுவலகம் தான் !
இப்போதுமட்டும்
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்தாலே
கவிதை கவிதையாக
கற்பனை விரிகிறது !

எப்போதும் கேட்கிற
பாடல்தான் !
இப்போதுமட்டும்
அதன் அர்த்தங்களை
உணர்ந்துகொண்டு
ஆனந்தப்படுகிறது மனது !

இப்போதெல்லாம்
மழை வந்தால்
கண்கள் முதலில்
வானவில்லைத்தான்
தேடுகின்றன !

இப்போதெல்லாம்
சக ஊழியனோடு
சண்டையே வருவதில்லை !

மொட்டைமாடியை விட
உன்னதமான ஒரு இடம்
உலகத்தில் வேறு ஏதாவது
இருக்கிறதா என்ன ?

இப்போதெல்லாம்
நானிருக்கும் இடத்தில்
அழகான பெண்களும்
இருக்கிறார்கள் !
ஆனால் ,
அவர்களைப் பார்க்கத்தான்
ஏனோ தோன்றுவதில்லை !

இப்போதெல்லாம்
குறைவான உணவை
நீண்ட நேரம் உண்கிறேன் என்று
அம்மா அடிக்கடி
குறைபட்டுக் கொள்கிறாள் !

இப்போதெல்லாம்
தன்னுடைய
அழகுசாதனப்பொருட்களை
நானெடுத்துப்
பூசிக்கொள்கிறேன் என்று
தங்கை தினமும்
என்னை ஏசிக்கொண்டிருக்கிறாள் !

இப்போதெல்லாம்
காதலின் காய்ச்சலின்
தேகம் எப்போதும்
திளைத்திருப்பதால்
வேலைநிறுத்தம்
செய்துவிட்டன போலும்
என் உடலின்
வியர்வைச்சுரப்பிகள் !

இப்போதெல்லாம்
ஆபாச சுவரொட்டிகள்
அருவருப்பாயிருக்கின்றன !

சந்தேகமேயில்லாமல்
இப்போதெல்லாம்
சந்திக்கும் பெண்களையெல்லாம்
சகோதரிகளாகத்தான்
நினைக்கிறேன் நான் !

இப்போதெல்லாம்
அலுவலகத்தில் எனக்கு
வேலையே இருப்பதில்லை !
ஆனாலும்
பொசுக்கென்று ஏன்
பலரும் பாராட்டித் தொலைக்கிறார்கள்
என்பதுதான் புரிவதில்லை !

இப்போதெல்லாம்
தொலைகாட்சியிலோ
திரைப்படத்திலோ ,
நெகிழ்ச்சியான காட்சி வந்தால்
கண்களில் தானாக
கண்ணீர் வழிவதை
சத்தியமாக என்னால்
நம்பவேமுடியவில்லை !!!








Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது