Skip to main content
காதல் வந்த பிறகு ........


எப்போதும் இருக்கும்
உலகம் தான் !
இப்போது மட்டும்
நிறம் மாறித்தெரிகிறது !

எப்போதும் பார்க்கிற
மனிதர்கள்தான் !
ஆனால் அவர்களின்
மகிழ்வான தருணங்களில்
அவர்களுக்கு நான்
எதிர்படுகிறேன் !

எப்போதும் இருக்கும்
அதே அலுவலகம் தான் !
இப்போதுமட்டும்
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்தாலே
கவிதை கவிதையாக
கற்பனை விரிகிறது !

எப்போதும் கேட்கிற
பாடல்தான் !
இப்போதுமட்டும்
அதன் அர்த்தங்களை
உணர்ந்துகொண்டு
ஆனந்தப்படுகிறது மனது !

இப்போதெல்லாம்
மழை வந்தால்
கண்கள் முதலில்
வானவில்லைத்தான்
தேடுகின்றன !

இப்போதெல்லாம்
சக ஊழியனோடு
சண்டையே வருவதில்லை !

மொட்டைமாடியை விட
உன்னதமான ஒரு இடம்
உலகத்தில் வேறு ஏதாவது
இருக்கிறதா என்ன ?

இப்போதெல்லாம்
நானிருக்கும் இடத்தில்
அழகான பெண்களும்
இருக்கிறார்கள் !
ஆனால் ,
அவர்களைப் பார்க்கத்தான்
ஏனோ தோன்றுவதில்லை !

இப்போதெல்லாம்
குறைவான உணவை
நீண்ட நேரம் உண்கிறேன் என்று
அம்மா அடிக்கடி
குறைபட்டுக் கொள்கிறாள் !

இப்போதெல்லாம்
தன்னுடைய
அழகுசாதனப்பொருட்களை
நானெடுத்துப்
பூசிக்கொள்கிறேன் என்று
தங்கை தினமும்
என்னை ஏசிக்கொண்டிருக்கிறாள் !

இப்போதெல்லாம்
காதலின் காய்ச்சலின்
தேகம் எப்போதும்
திளைத்திருப்பதால்
வேலைநிறுத்தம்
செய்துவிட்டன போலும்
என் உடலின்
வியர்வைச்சுரப்பிகள் !

இப்போதெல்லாம்
ஆபாச சுவரொட்டிகள்
அருவருப்பாயிருக்கின்றன !

சந்தேகமேயில்லாமல்
இப்போதெல்லாம்
சந்திக்கும் பெண்களையெல்லாம்
சகோதரிகளாகத்தான்
நினைக்கிறேன் நான் !

இப்போதெல்லாம்
அலுவலகத்தில் எனக்கு
வேலையே இருப்பதில்லை !
ஆனாலும்
பொசுக்கென்று ஏன்
பலரும் பாராட்டித் தொலைக்கிறார்கள்
என்பதுதான் புரிவதில்லை !

இப்போதெல்லாம்
தொலைகாட்சியிலோ
திரைப்படத்திலோ ,
நெகிழ்ச்சியான காட்சி வந்தால்
கண்களில் தானாக
கண்ணீர் வழிவதை
சத்தியமாக என்னால்
நம்பவேமுடியவில்லை !!!








Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது