Skip to main content
ஊடல் இருந்தாலும்
காதல் குறைவதில்லை .........

இப்போதெல்லாம்
காதலோடு தொடங்குகிற
நம் உரையாடல் ,
முடியும் போது
மோதலோடுதான் முடிகிறது !

முன்பெல்லாம்
காதலின் பசிக்கு
ஊடலை ,
ஊறுகாய் போலத்தான்
தொட்டுக்கொண்டிருந்தோம் !
இப்போது அதையே
உணவாக மாற்றி
உணர்வுகளை ஓயாமல்
சுட்டுக்கொண்டிருக்கிறோம் !

நான்கு நாள் தாடியோடு
நானிருந்தது
நாகரிகமாயில்லை என
நறுக்கென்று
நீ எடுத்துரைத்ததும் ,
மாலை நெருங்கும் போது
மதிய உணவு கொண்டால்
உடலானது உபாதைகளின்
புதிய உணவு ஆகிவிடும் என்று நான்
திட்டியபடியே உன் தலையில்
குட்டியதும் என
அழகாய்த்தான் ஆரம்பித்தது
நம் முதல் ஊடல் !

அழைத்த போது
அலைபேசி
அடித்துக்கொண்டே இருந்தது
எங்குதான் தொலைந்தாய் என
எதோ ஒரு மதியத்தில்
எக்குத்தப்பாய் நான் உன்னிடம்
எகிறியதும் ,
" அது என் தனிப்பட்ட
அந்தரங்கம் . " என
தந்திரமாய் நீ என்னைத்
திருப்பிதாக்கியதும் என
நம் இரண்டாவது ஊடலே
இதயங்களில் இடியை
இறக்கியது !

வலையில் தான்
உலவிக்கொண்டிருக்கிறாயே
சிறிது அரட்டையடிக்கலாம் என
ஆசையைத் திரட்டி நான்
அன்பு அழைப்பு விடுத்தால் ,
வேலையிருக்கிறது வேண்டாம்
என என்னை விரட்டி விடுகிறாய் !
கோபத்தில் வசைகளால் நான்
உன்னைப் புரட்டி விடுகிறேன் !
இப்படியே போனால் பிறகு
பிரிந்து விடுவதுதான் என
பதிலுக்கு நீயும் என்னை மிரட்டி விடுகிறாய் !

சனிக்கிழமை சாயங்காலம்
சந்திப்பது என நாம்
சிந்தித்து முடிவெடுத்து ,
சரியான சமயத்தில் நானும் வந்து
சலிக்க சலிக்க காத்திருப்பேன் !
இரண்டு மணிநேரமாகியும்
நீ வராததால்
மிரண்டு போன விழிகளோடு
அரண்டு போய் நின்றிருப்பேன் !
அப்போது பார்த்து நீ
அலைபேசியில் அழைத்து ,
" பெரிய பாளையத்தில் இருந்து
பெரியம்மா வந்திருப்பதால்
பெருமுயற்சி செய்தும்
புறப்பட்டு வர இயலவில்லை !
பிறிதொருநாள் சந்திக்கலாம் ! " என
புலபியபடியே
நீ
பொரிந்து கொட்டுவாய் !
"பிறகு வைத்துக்கொள்கிறேன் " என
இல்லாத வேட்டியை நானும்
வரிந்து கட்டுவேன் !

முந்தைய தேதிகளின்
சேதிகளை நாம்
பேசிப்பேசி மகிழ்ந்திருக்கும் போது
ஊசிபோல ஊடே நுழைந்து
ஊறு விளைவிக்கும்
வேறு அழைப்பிற்காக ,
பாதியில் என்னைப் புறக்கணித்து
ஆதியோடு அந்தமாய்
அங்கே நீ அளந்து கொண்டிருப்பாய் ! - நானோ
மீதிக்கதை பேச வழியின்றி
வீதியில் நிற்கும் விளக்குக்கம்பமாய்
நாதியற்று நேரம்போக நின்றிருப்பேன் !
அதற்குள் நீயோ , என்னை
சோதித்து வதைப்பதில் ,
சாதித்து முடித்திருப்பாய் !
நானோ ,
தாள முடியாத கோபத்தில்
தொலைபேசியைத் தரைக்குத்
தாரை வார்த்திருப்பேன் !

இப்படி ,
எவ்வளவு தான்
ஊடல் இருந்தாலும் ,
எள்ளளவும் குறைவதில்லை
நம் மீது நாம் கொண்ட காதல் !

வசதியில் வனப்பில்
உச்சமாய் இருக்கும்
உனக்கான வரங்களை
துச்சமாய்த் தூக்கிஎறிந்து
எனக்காக நீ காத்திருப்பதும் ,
நம் காதலை
என் வீட்டில் சொல்லியதற்கு
தண்டனையாய்
தாயன்பைத் துறந்து
தினம் தினம் துளித்துளியாய்
நான் இறந்து கொண்டிருப்பதும் , என
எங்கே தள்ளாடினாலும்
அங்கே மட்டும் நம்காதல்
நிமிர்ந்து நின்று விடுகிறதடி !!!













Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது