Skip to main content
பாசத்தின்
படைத்தலைவனே !

வேதியியலின்
வீரத்தளபதியே !

உழைப்பின் உருவகமே
வியர்வையின் உன்னதமே !

எமல்சனின் எரிமலையே
பாலிமரின் பாயும் புலியே !

அன்புக்கு
அடித்தளம் நீ !
நட்புக்கு
இலக்கணம் நீ !


மனதில் இருப்பதை
மறைக்காத
மாவீரன் நீ !
முதுகின் பின்னே
முறைக்காத
மாமனிதன் நீ !

சோதனைகளில்
சரித்திரம் படைக்கும்
தனித்தலைவன் நீ !
எதிர்ப்புகளை
எதிர்த்து வெல்லும்
ஏகலைவன் நீ !

தோல்வியில்
துவளாத
கஜினி நீ !
வெற்றியில்
மயங்காத
ரஜினி நீ !

ராமதாசின்
ரகசிய தோழன் நீ !
பிரதீசின்
பிரியத்தம்பி நீ !

கருனாகரனிடமும்
கண்ணியமாக
நட்புச் செய்தாய் !
பீட்டரிடமும்
பிரியமான
நேசம் வளர்த்தாய் !

சுரேசைக் கேட்டால்
நீ நல்ல
மனிதன் என்பான் !

ஹரியைக் கேட்டால்
உன்னை ஒரு
புனிதன் என்பான் !

மனோஜோ
உன்னை மட்டும்
மன்னன் என்பான் !

வேலை செய்யும்
வொர்க் மேனும்
உன்னைப் பார்த்தால்
அண்ணன் என்பான் !

பயிற்சிகள்
இல்லாவிட்டாலும்
முயற்சிகள் செய்தே
முன்னேற்றம் கண்டாய் !

திட்டித் திட்டியே
தேவாவைத்
தேர்ச்சி பெறச்செய்தாய் !

சசி எனும் சிங்கம்
உனது பாசறையில் தான்
பாடம் பயின்றது !
தினேஷ் எனும் தங்கம் - நீ
தட்டித் தட்டித்தான்
தகுதி பெற்றது !

காரமான
கருஜகனும்
உன்னைப் பார்த்தால்
உருகிப்போவான் !
வீரமான
வினோபாவும்
உன் கோபம் கண்டு
பணிந்து போவான் !

மாணிக்கம் என்ற பெயர்
கொண்டதாலேயே
நீ விசத்தால் உருவானவன் அல்ல .
வீரத்தால் உருவானவன் !

உனக்கு
உயர்ந்த பரிசென
எங்களின் உள்ளங்களைத்
தருகிறோம் !

உன்
வாழ்க்கைப்பயணத்தின்
வழித்துணைக்கு
வாழ்த்துக்களை
அனுப்பி வைக்கிறோம் !


போட்டியான உலகில்
வெல்லுவதெல்லாம்
நீயாக இருக்க வேண்டும் !
நாளைய சரித்திரம்
சொல்லுவதெல்லாம்
உன் பெயராக இருக்க வேண்டும் !!!









Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...