Skip to main content


ஈழம் உங்கள்
புத்தியில் இருந்தது !
ஈழம் எங்கள்
இதயத்தில் இருந்தது !

-------------------------------------------------

காத்திருந்தீர்கள்
நீங்கள் !
தவமிருந்தோம்
நாங்கள் !

-------------------------------------------------

நீங்கள்,
எங்கள் தூதுவர்களையும்
கொன்றீர்கள் !
நாங்கள்,
தொலைகிறது என்று
உங்கள் ஒற்றர்களையும்
மன்னித்தோம் !

-------------------------------------------------

உங்கள்
கண்ணீர்ச்சுரப்பியும்
வியர்வையைச்
சுரந்தது !
எங்கள்
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீரைச்
சுரந்தது !

-------------------------------------------------

உங்களுடையவர்கள்
படைவீரர்கள் !
எங்களுடையவர்கள்
உடன்பிறப்புக்கள் !

-------------------------------------------------

உங்கள் தலைவன்
இருக்கிறான் !
எங்கள் தலைவன்
வாழ்கிறான் !

-------------------------------------------------

ஓலமிட்டீர்கள்
நீங்கள் !
முழக்கமிட்டோம்
நாங்கள் !

-------------------------------------------------

தந்திரநரிகள்
நீங்கள் !
விடுதலைப்புலிகள்
நாங்கள் !

-------------------------------------------------

போர்க்குற்றவாளிகள்
நீங்கள் !
புரட்சியாளர்கள்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களுக்கது
களம் !
எங்களுக்கது
வாழிடம் !

-------------------------------------------------

உங்களுடையது
வெறி !
எங்களுடையது
தாகம் !

-------------------------------------------------

உங்களுடையது
சண்டை !
எங்களுடையது
போர் !

-------------------------------------------------

உங்கள்
துப்பாக்கியில்
குண்டுகள் !
எங்கள்
துப்பாக்கியில்
கொள்கைகள் !

-------------------------------------------------

சரித்திரத்தின்
கருப்புப்பக்கத்தில்
நீங்கள் !
சரித்திரத்தின்
சிவப்புப்பக்கத்தில்
நாங்கள் !

-------------------------------------------------

எங்கள்
உடல்கள் மட்டும்
இறந்துவிட்டன !
உங்கள்
உடல்கள் மட்டும்
நடமாடுகின்றன !

-------------------------------------------------

வெற்றியின்
மிதப்பில்
நீங்கள் !
தோல்வி என்ற
படிக்கட்டில்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
புதைக்கப்பட்டோம் !
எங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
விதைக்கப்பட்டோம் !
 

Comments

  1. உணர்வுக் குவியலாய் குமுறிடும் வரிகள்!

    இதய வலியை எழுதிச் சென்றீர்கள்... அருமை!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி தோழி

      Delete
  2. //உங்களைப் பொறுத்தவரை நாங்கள் புதைக்கப்பட்டோம் !
    எங்களைப் பொறுத்தவரை நாங்கள் விதைக்கப்பட்டோம் !//

    மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உணர்வுப்பூர்வமான வரிகளை உணர்ந்ததற்கு நன்றி ஐயா

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...