Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................



சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !


சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !


சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !


சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !


சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !


சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !


சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !


சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !


சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !

Comments

  1. Thanks ji, enakkaga masaala kavidhai ezhudhi ennai vaazhthiyadhaku, keep in touch

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது