Skip to main content
குப்பா ..............




குடித்து விட்டு
தெருவில் கிடக்கும்
குப்பா !
நினைவிருக்கிறதா
நீ
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா !

அவிழ்ந்து
கிடக்கிறது உன்
வேட்டி !
இன்னுமா
எடுக்கிறாய்
உறக்கத்தைப்
பேட்டி ?

புலர்ந்து விட்டது
காலை !
நிரம்பி விட்டது
சாலை !
இன்னும் உனக்கு
புழுதியில்  என்ன
வேலை ?

குப்பா ..........
உன் தினப்படி
சங்கதியென்ன ?

உழைத்தே
உன் முதுகை நீ
ஓடிக்கிறாய் !
காசு கேட்கும்
மனைவியை
அடிக்கிறாய் !
மாலை வந்ததும்
குடிக்கிறாய் !
இப்படியே
ஒவ்வொரு நாளையும்
முடிக்கிறாய் !

குடி எனும்
கூர்வாளால்
உன் குடும்பத்தோரணம்
கிழிகிறது !
குடித்துக் குடித்தே
உன் உடம்பு கெட்டு
அழிகிறது !
உன் பொழுதெல்லாம்
இப்படியே நாளும்
கழிகிறது !

இன்னும் காயவில்லை
உன் வியர்வையின்
திவலை !
உனக்கென்ன
அப்படியொரு
கவலை ?
இடிக்கத்தான் வேண்டுமா
உரலில் இட்டு
அவலை ?

குப்பா ...........
நீ
கட்டியிருக்கிறாய்
ஒருத்திக்குத்
தாலி !
உன்
வாழ்வுப்பயிருக்கு
அதுதானே
வேலி !
இப்படியே குடித்தால்
வெகு விரைவில்
உன் ஆரோக்கியம்
காலி !
போதை தருவதில்
மனைவியைத் தவிர
மற்றதெல்லாம்
போலி !

குப்பா .........
உழைப்பைக்
காரணங்காட்டி
இங்கே நீ
குடித்தால் .....
ஓராயிரம்
காரணம் கூறி
உன் மனைவியும்
அங்கே குடிக்கலாம் !

குப்பா ....................
இனி உன் கால்கள்
தேர்ந்தெடுக்கட்டும்
வீடு செல்லும்
வீதியை !
இனி காட்டாதே
குடும்பத்திற்கு
பசி எனும்
பீதியை !
நாளும் கடைபிடி,
சம்பாதித்ததை
சம்சாரத்திடம் தரும்
நீதியை !
வாங்கிக் கொள்,,,
செலவழித்து
அவள் தரும்
மீதியை !
அப்புறம் அறிவாய்
வாழ்வில்
வசந்தம் வரும்
சேதியை !

குப்பா .........
ஆயிரம் பேர்
சொருகலாம்
அறிவுரை எனும்
கத்தியை !
நீ
நினைத்தாலொழிய
மாற்ற முடியாது
யாரும் உன்
புத்தியை !.

நீயாகத்தான்
திருந்த வேண்டும் !
தவறை நினைத்து
வருந்த வேண்டும் !

அதற்குள்
வந்து விடும்
முதுமை !
மலராது
உன் வாழ்வில்
புதுமை !

ஆனால் ...........

ஒரே
ஒரு வேண்டுகோள் !

தொடக்கக்கல்வி
வரையிலாவது
உன் பிள்ளைகள்
படிக்கட்டும் !

நாளை,
உன்னைப் போலவே
கூலி பெற்று
குடிக்கப் போகும்
உன் பிள்ளைகளில்
ஒருவனாவது
இதைப் படித்துத்
திருந்தட்டும் !!!!!

Comments

  1. அறிவுரைப்பாடல் அருமை தான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. " அறிவுரைப்பாடலை " ரசித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஐயா !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...