Skip to main content
கள்ளம்




கயமை  என்ற
எரிபொருளால்
உடல்
நனைந்து விட்டது !
காமத் தீ,
அங்கே எரிகிறது !
குளிர்காய்வதற்கு முன்,
கொஞ்சம் யோசிக்கலாமே !

நெறி கொண்டு
பயணித்தால்தான்
அது நதி !
நெறி பிறழ்ந்து
பயணித்தால்,
அது வெள்ளம் !

உறக்கம்
கண்ணில்
இருக்கும் வரை
இருட்டு
சுகமானதுதான் !

ஏதோ ஒரு மனதை
வெட்டிக்
கூறு போட்டுத்தான்,
மாமிசம்
உண்ண வேண்டுமா ?

பள்ளத்தில் விழும்
அனைவருக்கும்,
கிளைகள்
கிடைத்துவிடுவதில்லை !

காமம் என்பது
புண் !
மருந்திடலாமா ?
சொறியலாமா ?
முடிவு நம்மிடம் !

எந்த ஒரு
தப்புக்கும்
ஒருநொடி அவகாசம்,
குறைந்தபட்சம்
இருக்கிறது !

உள்ளத்தில்
பள்ளத்தைத் தோண்டி - அதில்
கள்ளத்தைப்
புதைத்து வைத்தாலும்,
எவனும், எவளும்
தப்ப முடியாது !
சூனியத்தின் வேர்கள்
என்றாவது
கழுத்தை
நெரிக்கத்தான் நெரிக்கும் !

மனதில் கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்,
சின்னச் சின்ன
தண்டனைகள்
உடனே
கிடைக்கப் பெறுபவர்கள்
பாக்கியசாலிகள் !

' ஒரே இணை ' என்ற
அமைப்பு தரும்
சலிப்பில் தான்
கள்ளத்தனம்
பிறக்கிறது
என்பவர்களுக்காக.................

வெறும்
பசியைத்
தணித்துக் கொள்வது
மட்டுமல்ல
தாம்பத்யம் !
அது,
ஒருவருக்காக
மற்றொருவர்
சுவாசிப்பது !
சுவாசம், 
சலிக்குமா என்ன ?

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது