Skip to main content

இன்னும்
விடியவில்லை !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

விடிந்துவிட்டது !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

உறக்கம்,
கலைந்து விட்டது  !
யாராவது எழுப்பட்டும் !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

எழுப்பியும் விட்டார்கள் !
பக்கத்தில் இருப்பவன்
எழட்டுமே !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !


=================================================

நாய் குரைத்தது !
நாய்கள் குரைத்தன !
மனிதன் குரைத்தான் !
மனிதர்கள்,
வேடிக்கை பார்த்தனர் !

================================================

நீ
சுதந்திரமானவன்  !
தேர்தெடுக்க
முழு உரிமை உள்ளவன் !
ஜனநாயகத்தின்
பிரதிநிதி !
சொல் !
தூக்கா ?
விஷமா ?
கழுமரமா ?
மலையுச்சியா  ?

=================================================

எல்லா
நிர்பந்தமும்
பழக்கமாகி விடுவதில்லை !
எல்லா
பழக்கமும்
நிர்பந்தத்தில் இருந்து
வருவதில்லை !

==================================================

பெஞ்சில்
தலைசாய்க்கிறான்
ஒரு மாணவன் !
வடியத்தொடங்குகிறது
உறக்கம் !

==================================================

மறுபடியும்  ஒரு
சந்தர்ப்பத்தில்
மறுபடியும்
அத்தவறைச் செய்து
மறுபடியும்  நாம்
சராசரிகளாகின்றோம் !

===================================================

                                                                          

Comments

  1. அனைத்தும் அருமை.

    மிகவும் பிடித்தது:

    //நாய் குரைத்தது !
    நாய்கள் குரைத்தன !
    மனிதன் குரைத்தான் !
    மனிதர்கள்,
    வேடிக்கை பார்த்தனர் ! //

    ;)))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது