Skip to main content

இன்னும்
விடியவில்லை !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

விடிந்துவிட்டது !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

உறக்கம்,
கலைந்து விட்டது  !
யாராவது எழுப்பட்டும் !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

எழுப்பியும் விட்டார்கள் !
பக்கத்தில் இருப்பவன்
எழட்டுமே !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !


=================================================

நாய் குரைத்தது !
நாய்கள் குரைத்தன !
மனிதன் குரைத்தான் !
மனிதர்கள்,
வேடிக்கை பார்த்தனர் !

================================================

நீ
சுதந்திரமானவன்  !
தேர்தெடுக்க
முழு உரிமை உள்ளவன் !
ஜனநாயகத்தின்
பிரதிநிதி !
சொல் !
தூக்கா ?
விஷமா ?
கழுமரமா ?
மலையுச்சியா  ?

=================================================

எல்லா
நிர்பந்தமும்
பழக்கமாகி விடுவதில்லை !
எல்லா
பழக்கமும்
நிர்பந்தத்தில் இருந்து
வருவதில்லை !

==================================================

பெஞ்சில்
தலைசாய்க்கிறான்
ஒரு மாணவன் !
வடியத்தொடங்குகிறது
உறக்கம் !

==================================================

மறுபடியும்  ஒரு
சந்தர்ப்பத்தில்
மறுபடியும்
அத்தவறைச் செய்து
மறுபடியும்  நாம்
சராசரிகளாகின்றோம் !

===================================================

                                                                          

Comments

  1. அனைத்தும் அருமை.

    மிகவும் பிடித்தது:

    //நாய் குரைத்தது !
    நாய்கள் குரைத்தன !
    மனிதன் குரைத்தான் !
    மனிதர்கள்,
    வேடிக்கை பார்த்தனர் ! //

    ;)))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது