Skip to main content
சில நிராகரிப்புகளும் ஒரு தெளிவும்

கடைசியில்
அவளும் என்னை
நிராகரித்து விட்டாள் !

மெலிந்த தேகம்
மாநிறம்
சராசரித் தோற்றம்
நடுத்தர வர்க்கம் !

பட்டம் ஒன்று
படித்திருந்தாள் !
கட்டம் கட்டிய
புகைப்படத்தில்
விட்டம் பார்த்து
சிரித்திருந்தாள் !

மூன்று நாட்களாய்
மனதளவில் அவளை
மனைவியாய்
வரித்திருந்தேன் !

இவள் தான்
இவள் தானென்று
இருநூறு முறையாவது
இதயத்திடம்
இறுமாந்திருப்பேன் !

நிறத்தைக் காரணங்காட்டி
நிராகரித்து விட்டாள் !

வாழ்த்துக்களோடு
விடை பெற்றுக் கொண்டாள் !

வாழ்த்துதல்
நிராகரிப்பின்
நாசுக்கான மொழி !

திருமணச் சந்தையில்
விலை போகாததென்
தலையெழுத்து தானென
அலை பாயும் மனதைத்
தேற்ற  முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன் !

மாலை வந்ததும்
ஆலையில் இருந்து
வேலை முடிந்து
சாலையில் நடந்தேன் !

சில காட்சிகள்
கண்ணில் தட்டுப்பட்டதும்
மனக்கவலை
சற்றே மட்டுப் பட்டது !

அவையாவன,

ஊன்று கோல் பற்றி
சாலை கடக்கக்
காத்திருந்தான்
ஊனமுற்ற ஒருவன் !

எப்போது வீடு போய்ச் சேர்வானோ ?

வாங்குவோர்கள்
வாங்குவார்களென
காய்கறிகளைக்
கூறு கட்டி வைத்திருக்கிறாள்
நூறு தொடும் கிழவியொருத்தி !

யாராவது வாங்குவார்களா ?

குப்பையை ஓயாமல்
கிளறிக் கிளறி
அலும்பு பண்ணுகிறது
அந்தத் தெருநாய்
எலும்புத் துண்டாவது கிடைக்குமென !

கிடைத்திருக்கிறதா ?

ஒவ்வொருவராக
மறுத்த பின்னும்
ஒவ்வொருவரிடமும்
மறுபடி மறுபடி
கையேந்துகிறான் அந்தக்
கிழட்டுப் பிச்சைக் காரன் !

இன்றிரவு சாப்பிடுவானா ?

அன்றாடம்
மேஜைக்கு மேஜை
மன்றாடுகிறான்
நடுத்தர உணவகமொன்றில் - அந்த
நடுத்தர வயதுக்காரன் !

அவன் மாதச் சம்பளம் எவ்வளவு ?

கக்கத்து வியர்வையோடு
கடந்து போகிறான்
பக்கத்து மாநிலத்தான் !

அவனுக்கும் குடும்பம் இருக்குமோ ?

இல்லம் வந்ததும்
உள்ளம் தெளிந்தது !
மனப் பள்ளம் ஒன்று
மண் மூடிப் போனது !

எதாவது செய்ய வேண்டும் !
எனக்கிருக்கும் நம்பிக்கை !
என்னால் இயன்ற சிரத்தை !

பேப்பரும்
பேனாவும் எடுத்து
பேசாமல் அமர்ந்து
ஸ்ரீ ராமஜயம் எழுத ஆரம்பித்தேன் !

என்னை
எனக்குக் காட்டிய
அவர்களுக்காகவும் !
அவர்களை
எனக்குக் காட்டிய
அவளுக்காகவும் !!!

Comments

  1. your creation is Simply awesome and fantabulous

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த தங்கள் பாராட்டிற்கு நன்றிகள் தோழி ! விரைவில் தமிழில் தாங்களும் படைப்புகள் வழங்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி !

      Delete
  2. பிரமாதம்! என்னை எனக்குக் காட்டிய அவர்களுககாகவும், அவர்களை எனக்குக் காட்டிய அவளுககாகவும்! இந்தக் கடைசி வரிகளில் மனதைத் திருடி விட்டது கவிதை! மனத்தை விட நிறமா பெரியது? சிந்திக்க வைத்த அருமையான கவிதை!

    ReplyDelete
  3. உயிரற்றது என்று அறியாமல்
    நிழலை நேசித்து நிஜத்தில் தொலைந்துபோகிறார்கள் பலர்
    நிதர்சனம் அறிகையில் வெறுத்துப்போகும் நிழலும் வாழும் வாழ்க்கையும்!
    அருமையான பதிவு!
    மனதின் உணர்வுகளை அழகாய் பதித்திருக்கிறீர்கள் சார்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது