Skip to main content
பழகிப் புளித்த தயிர்




உருட்டிப் பார்த்தேன்


விழவில்லையடி தாயம் !


மருந்தில்லாமல்


ஆறவில்லை மனக் காயம் !




முடவன் ,


கொம்புத்தேனுக்குப் பட்ட ஆசை !


வேதனையில் ,


நரைத்தே போய் விட்ட மீசை !




நெஞ்சுக்கு பாரமடி


இந்த மூச்சு !


மனதில் விழுந்ததோ


வெட்டரிவாள் வீச்சு !




இனி நான்


படிக்க நினைப்பது ராமாயணம் !


முடிக்க நினைப்பது ,


உன் பெயரின் பாராயணம் !




இதயத்தைக் கொடுத்தேனே


உனக்கு யாசகம் !


அதன் துடிப்பை நிறுத்தியது


உனது ஒரு வாசகம் !




மறந்து விடு என்றதற்கு ,


இறந்து விடு என்றிருக்கலாமே - என்


இறந்த காலக் காதலியே !




நீ ,


தூரத்தில் தெரிந்த


கோணல் நீர் !


கிட்டே வந்ததும் ,


காணாமல் போன


கானல் நீர் !




நான் ,


வடையைத் தொலைத்த


காக்கை !


உடையில் நடமாடும்


யாக்கை !




"ஊற்றிப்பார்த்தேன் "


அடங்கவில்லையடி புகைச்சல் !


இது ,


கையில்லாதவனுக்கு ,


முதுகில் வந்த நமைச்சல் !




மறந்து போனது


குயிலோசை கேட்கும்


நம் பூங்கா !


உன் குரலோசை இன்றி


என் இரவுகள் இனி தூங்கா !




ஆடித் தோற்றேன்


காதலின் சதுரங்கம் !


ஆடப் போகிறேன்


இனியென்றும் 'மது' ரங்கம் !




போதுமடி , இனி எதற்கு


உடம்பில் இந்த உயிர் !


சாவென்பது , இனி எனக்கு


பழகிப் புளித்த தயிர் !


பழகிப் புளித்த தயிர் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது