Skip to main content
துப்பாக்கி



'துப்பார்க்குத் துப்பாய'
படிக்குமுன்பே
துப்பாக்கி
எனக்கு அறிமுகம் !

நானறிந்த துப்பாக்கியில்
அப்போது
ஆறு குண்டுகள் !
இப்போது
எண்ணிக்கை
சற்றுக் கூடியிருக்கலாம் !

ஒரு துப்பாக்கியை
முறைப்படி வாங்கும்
விவரங்களை
இணையத்தில்
தேட வேண்டும் !

கைவசம்
ஒரு லகரம் இருக்கிறது !
தொகை சற்றுக்கூடுதலானால்
வங்கிக்கடன்
பெற்றுக்கொள்ளலாம் !

துப்பாக்கியோடு சேர்த்து
சுடுவதற்கான பயிற்சி
இலவசமா அல்லது
அது தனியா ?

சுட்டுப்பழக
கூடுதல் குண்டுகள்
தருவார்களா ?

பீரோவின்
ரகசிய மூலையில்
அதைப் பதுக்கவேண்டும் !
அந்த
ஒற்றைச்சாவி
எப்போதுமிருக்கும்
என் உள்பாக்கெட்டில்
இதயம் தொட்டுக்கொண்டு !

எனக்கு
எதிரிகள்
இருக்கிறார்கள் தான் !
அவர்களைக் கொல்லவேண்டிய
தேவை எனக்கில்லை !
மேலும்,
அவர்களைக் கொல்ல
வாய்த்துப்பாக்கி போதும் !
கைத்துப்பாக்கி
தேவையில்லை !

வேட்டையாட
விருப்பம்தான் !
காடுகளைத்தான்
காணவில்லை !
ஆகவே
அந்தக்காரணமும் இல்லை !

பாதுகாப்புக்கு
நான்
துப்பாக்கியை விட
பணத்தை நம்புகிறேன் !

தற்கொலை புரிவதென்றால்
தூக்கமாத்திரை தின்று
சுகமாகச் சாகலாம் !
துப்பாக்கி தேவையில்லை !

பறவை
சுடுவதென்றால்
எஞ்சியிருக்கும்
காக்காவைத்தான்
சுடவேண்டும் !
ஆனால்,
காக்காக்கறி
ஆண்மைக்கு நல்லதென்ற
மருத்துவக் குறிப்பை
நானெங்கும் கண்டதில்லை !
ஆகவே,
அதுவும் காரணமில்லை !

பின்னே,
நான் ஏன்
துப்பாக்கி வாங்கவேண்டும் ?
மண்டையைப் போட்டு
உடைத்துக் கொள்ளாதீர்கள் !
காரணம்
மிக எளியது !

என்
பக்கத்து வீட்டுக்காரன்
ஒரு துப்பாக்கி
வைத்திருக்கிறான் !







Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது