Skip to main content
பார்வையற்றவன்









அவன் ஒரு
குருடன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !

என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !

நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !

யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக  இருந்தது !

கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !

என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !

அவன்
எங்கு போகவேண்டும் ?

அவனுக்கான
பேருந்து எது ?

யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !

அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !

நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !

எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?

யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !

இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !

எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !

எதற்கு
வீண் வம்பு ?

பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !

மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !

எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !

ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !

தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !

எப்படிக்
கண்டு பிடிப்பான் ?

நடத்துனர்
தெரிந்தவரோ ?

இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?

வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !

ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............

சுருக்
என்றது !

என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !

எட்டிப் பார்த்தேன் !

எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !

மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !

Comments

  1. மிகவும் அழகான யதார்த்தமான படைப்பு. நம்மில் பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கண்ணிருந்து குருடர்கள் போலவே தான் செயல்பட வேண்டியுள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது