Skip to main content
சமூக முதிர்ச்சி





சேர்ந்தாற்போல
நான்கு இளைஞர்கள்
நடந்து போனால்
காட்டாயம் அவர்களிடம்
மதுவாசம் !

தகாத வார்த்தைகளால்
தந்தையைத் திட்டுகிறான்
ஒரு சிரிப்பு நடிகன் !
தியேட்டரில்
கைதட்டுகிறார்கள் !

பள்ளிச்சிறுமி ,
கையில் அலைபேசி ,
நமட்டுச் சிரிப்பு
அடிவயிற்றில் பகீர் !

ஆசிரியர்களை 
வேவு பார்க்க
மாணவர்களை
நியமிக்கும்
பள்ளி நிர்வாகம் !

ஜோதிடர்களின்
தயவால் தான்
இன்னும்
கூட்டமிருக்கிறது
கோவில்களில் !

காதல் பேசுவது
பெண்களுக்குப்
பொழுது போக்கு !
இளைஞர்களுக்கு
பிறவிப் பயன் !

முகநூலை
தடை செய்தால்
லட்சக்கணக்கில்
தீக்குளிப்பு கட்டாயம் !

அருந்தமிழ் நாட்டில்
அடுக்கு மொழியில்
ஆங்கிலம் பேசும்
ஐந்து வயதுக் குழந்தைக்கு
அம்மா என்ற வார்த்தை
தெரியவில்லை !
பலே !

பந்தி போடும்
வரை தான்,
கல்யாண வீடுகளில்
கூட்டமெல்லாம் !

வரிக்கு
விலக்கிருப்பதை
உறுதி செய்த பின்புதான்
வக்கற்றோரை நோக்கி
உதவிக் கரங்கள்
நீள்கின்றன !

கற்பு என்பது
கெட்ட வார்த்தை !

பாசம் என்பது
மூட நம்பிக்கை !

புனிதம் என்பது
பைத்தியகாரத்தனம் !

பற்றியெரியும்
குடிசையின் முன்
குளிர்காய்கிறார்கள் !
ஒளி கொடுக்கும்
தீபத்தை
ஊதி அணைக்கிறார்கள் !
மாற்று சிந்தனையாம் !

" பெண்களுக்கென்று
தனியாக
மதுபானக் கடைகள்
திறக்கப் படும் "
அடுத்த
தேர்தலுக்கு
ஒரு வாக்குறுதி
தயார் !

" எதற்கும் சற்று
வறுமைக் கோட்டை
இறக்கியே போடு ! "
ஐநா சபைக்கு
கணக்குக் காட்ட
உதவும் !

இனிவரும்
இன்குபேட்டர்களில்
கருமுட்டைகள்
குழந்தைகளாகும் !

' இதிலென்ன தப்பு ? ' என்று
இறைச்சிக் கடைகளில்
இறந்தவர்களின்
சடலங்கள்
தொங்கும் நாள்
இதோ வந்துகொண்டிருக்கிறது !

" சமூக முதிர்ச்சி "
என்பதன் பொருளே
மேற்சொன்ன
மாற்றங்களை
ஏகோபித்து
ஏற்றுக் கொள்வதுதானே !
வேறென்ன ???










Comments

  1. சமூக முதிர்ச்சி மிகவும் கவலைப்பட வைக்கிறது. ஆக்கம் அருமை.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது