Skip to main content
இரயில் பயணம்





அந்தப் புகைவண்டியின்
உள்ளே
கூட்டமிருந்தது !
ஒவ்வொருவனிடத்தும்
ஏதோவொரு
வாட்டமிருந்தது !
ஓரமாய் ஓரிடத்தில்
இளைஞர்களின்
ஆட்டமிருந்தது !
பெண்களைத்
தேடுவதிலேயே எனது
நாட்டமிருந்தது !

எவளாவது
சிக்குவாளா ?
கண்வழியே
காமத்தைக்
கக்குவாளா ?

முதலில்
சீட்டு !
பிறகுதான்
மன்மதனின்
பாட்டு !

கழுவி வைத்த
பாத்திரத்தில்
பருக்கையைத்
தேடுவது போல
நான் எனக்கான
இருக்கையைத்
தேடினேன் !

அதிர்ந்தேன் !
அடுக்கி வைத்த
ஆசைகளோடு
அப்படியே
உதிர்ந்தேன் !

உழைத்து
உழைத்து
ஓடாய்ப் போன
உழவன் போல
ஒரு கிழவன் !

நெறி பிறழாத
சத்தியன் போல
ஒரு மத்தியன் !

கணவனின்
வசவுகளையெல்லாம்
வெகுமதியாகக் கருதும்
ஒரு திருமதி !

தலை நரைத்த
சீமாட்டியாய்
ஒரு மூதாட்டி !

சீருடையணிந்த
ராணுவன் போல
ஒரு மாணவன் !

சம்பாதிப்பிலேயே
சிந்தை செலுத்தும்
ஒரு தந்தை !

அப்புறம்
ஒரு பாப்பா !

அடங்கொன்னியா !

இளசான ஒரு
பெண்ணைப் பார்த்து
அவளது
எண்ணை வாங்கலாம்
என்ற நினைப்பில்
மண்ணைப் போட்டானே
மகாதேவன் !

மூன்று மணிநேரமும்
போரடிப்பதா ?
இந்த மொக்கைகளைக்
கட்டிக் கொண்டு
மாரடிப்பதா ?

எனக்கு மட்டும்
பெண்களின் சூழலே
வாய்ப்பதில்லை !
என் குரலென்றால்
இந்த இறைவன்
செவியையே
சாய்ப்பதில்லை !

எதிரில்
பெண் இருந்தால்
நானென்ன
தின்றா விடுவேன் ?
கலாச்சாரத்தைக்
கழுத்தை நெரித்துக்
கொன்றா விடுவேன் ?

சில பார்வைகள்
சில புன்னகைகள்
பிறகு
 நல விசாரிப்பு !
அப்புறம் முடிந்தால்
குல விசாரிப்பு !

அவ்வளவுதானே !

அதற்குக் கூட
எனக்குத்
தகுதியில்லையா ?
மன்மதன் நாட்டில்
எனக்கென்று ஒரு
தொகுதியில்லையா ?

வெகுதிடீரென
வீரிட்டழுதது
பக்கத்திலிருந்த
பாப்பா !

தோ தோ
தோ என்றான்
தகப்பன் !

அங்கே இங்கே
என்று
அனைத்தையும்
வேடிக்கை காட்டினான் !

அன்னையின்
நினைப்பு வந்திட்ட
குழந்தைக்கு
அகிலத்தையே
வேடிக்கை காட்டினும்
அழுகையை நிறுத்துமா ?

அது
இன்னும் அழுதது
உரத்து !
அதிகரித்துக் கொண்டே
போனது
கண்ணீரின் வரத்து !

" மாமா பாரு
மாமா பாரு ! "
என
என்னைக் காட்டினான்
அந்தத் தகப்பன் !

இது வேறா ?

நான்
அசடு வழிந்தேன் !

குழந்தை
என்னையே
பார்த்தது
உற்று !
அழுகைக்கு
வைத்தது
அவசரமாய் ஒரு
முற்று !

குழந்தை
பிஞ்சுக் கையால்
தப் பென்று
 என் முகத்தில்
அடித்தது !
தாவி என்னைக்
கட்டிக் கொள்ளத்
துடித்தது !

அனைவரும்
அடியேனையே
பார்த்தனர் !

இப்போது
இக்குழந்தையை
வாங்கத்தான் வேண்டும் !
அதன் கனத்தை
கொஞ்சநேரமாவது
மடியினில்
தாங்கத்தான் வேண்டும் !

வாங்கிக் கொண்டேன் !

குழந்தை
 மடியில்
அமர்ந்து கொண்டது
பாந்தமாக !
அனைவரையும்
வேடிக்கை பார்த்தது
சாந்தமாக !

அதுவரையில்
மனதிலிருந்த வெம்மை
சட்டென்று
ஆறிப் போனது !
சகலமும்
ஒரு நொடியில்
மாறிப் போனது !

தெய்வத்தின்
ஸ்பரிசம்
இப்படித்தான்
இருக்குமோ ?

புகைவண்டியின்
தடதடப்பு !
குழந்தை தந்த
கதகதப்பு !
பரவசத்தின்
மதமதப்பு !

சத்தியமாய்
கிறங்கி விட்டேன் !
என்னையறியாமல்
உறங்கி விட்டேன் !

திடுக்கிட்டு
விழித்தால்
இறங்க வேண்டிய
இடம் வர
இரண்டு நிமிடமிருந்தது !

பக்கத்து
இருக்கை
காலியாக இருந்தது !

விடைபெறாமல்
போய் விட்டேனே
சற்று முன்னர்
என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த
அந்த குட்டித் தாயிடம் !!!






Comments

  1. Replies
    1. தங்களது வாசிப்பால் அந்த அனுபவம் மேலும் இனிமை பெறுகிறது நண்பரே

      Delete
  2. அருமை நண்பா உணர்வுகளின் கொப்பளிப்பு
    எதிர்பாராத ஸ்பரிசங்களில் மட்டுமே இறைவனை நம்மை வருடி செல்லுகிறான் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அழகிய வெளிபாடு

    ReplyDelete
    Replies
    1. இறைவன், யாவற்றிலும் இருக்கிறான் ! தங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்களின் சிறு பாராட்டிலும் இருக்கிறான் தோழி ! நன்றி !

      Delete
  3. சற்று முன்னர்
    என்னைத் தாலாட்டித்
    தூங்க வைத்த
    அந்த குட்டித் தாயிடம் !!!
    அருமையான நெகிழவான வரிகள் குருச்சந்திரன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் அந்தக் கடைசி வரியில் தான் கவிதையின் ஜீவனே இருக்கிறது ! அதை உணர்ந்து குறிப்பிட்டதற்கு நன்றி !

      Delete
  4. அருமை.. அப்படியே அந்த ரயிலில் நானும் இருந்தது போல இருந்தது. அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது