Skip to main content
பிரிந்த காதலி





 
அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப்பமில்லை !

ஏதோ
நிறுத்தத்தில்
பேருந்து நின்றது !

அவள்
இன்னும் திரும்பவில்லை !

நடத்துனர்
விசில் ஊதினார் !

உள்ளுணர்வு
சொல்லியிருக்கவேண்டும் !
சட்டென்று
அவள்  திரும்பி
என்னைப்
பார்த்து விட்டாள் !

அட சட் !

அது
அவளில்லை !

அவளைப் போன்ற
 சாயலில்
எவளோ !

கொஞ்சம்
நிம்மதியாகக் கூட
இருந்தது !

பெருமூச்சு
விட்டேன் !

பேருந்து
ஓடிக்கொண்டிருந்தது !

பழையபடி
திரும்பிக் கொண்டாள்
அவளைப் போலிருந்த
அந்த அவள் !

அவசரப் பட்டு
அந்த
அலைபேசி எண்ணை
அழித்திருக்க வேண்டாம் !


என்றாவது ஒருநாள்
பார்த்து விடலாமென்று
பார்ப்பவர்களிடமெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறாளோ
என்னைப் போலவே
அவளும் !

Comments

  1. காட்சிகள் கண் முன் தெரிய வைக்கும் வரிகள்...

    தேடிக்கொண்டு இருக்கலாம்... அப்படி நினைத்தும் சந்தோசப்பட்டும் கொள்ளலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் ! நான் உங்கள் பக்கத்தை வாசிக்கிறேனோ இல்லையோ, நீங்கள் என் பக்கத்தை தொடர்ந்து வாசிப்பது மகிழ்வாக இருக்கிறது !

      Delete
  2. என் தோழன் இன்றுதான் பிரிந்து போன தன் காதலியின் எண் கிடைத்திருக்கிறது பேசலாமா என்றான் சந்தோஷமோ, துக்கமோ இன்றி சலனமில்லாமல் பேசு என்றேன் அவளின் வாழ்வும் உன் வாழ்வும் பாதிக்காமல் என்றேன். உங்கள் கவிதையைப் படித்தவுடன் நாங்க பேசிட்டோமே என்ற அவனின் குதூகல வார்த்தைகள் என் காதில் மறுபடி ஒலிக்கிறது. எல்லா இடத்திலும் இப்படி ஒரு தேடல் இருக்கத்தான் செய்கிறதோ?

    ReplyDelete
  3. ஒரு காதலி, தோழியாக அறிமுகமாகி, பிறகு காதலியாகி சந்தர்ப்பவசத்தில் பிரிந்து மீண்டும் எப்போதாவது சந்திக்கும் போது பழையபடி தோழியாகவே மாறி விடுகிறாள் ! அவளை தோழியாகவே பாவிப்பது தான் நல்லது ! இதை உங்கள் நண்பர் புரிந்திருப்பார் ! கருத்துக்கு நன்றி தோழி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது