Skip to main content

Posts

இதைப் போலவே இருக்கும் இன்னோர் உலகத்தில் மனிதச்சிலை வீற்றிருக்கும் ஒரு கோவிலில் கடவுளின் பிரார்த்தனை இப்படித்தொடங்குகிறது ......... " எல்லாம் வல்ல மனிதா ............. தயவுசெய்து தயவுசெய்து சகமனிதன் துயர் துடை ! "
நியூட்டனின் மூன்றாம் விதி நமது போராட்டங்கள் கேயாஸ் தியரிப்படி இப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் அவர்களுக்குப் புறக்கணிக்கத்தக்கவை ! இஃது இன்னோர் விடுமுறை என்றுதான் அவர்கள் கடந்துபோகிறார்கள் நமது கடையடைப்புக்களை ! மூன்று நாட்களுக்கு மேல் பேருந்துகளை முடக்கி வைத்தால் அது நமக்கே பதிப்பு என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ! உண்ணாவிரதங்கள் நமது வயிற்றினில் ஏற்படுத்தும் நீர்த்த அமிலங்களில் அவர்கள் நீச்சல் பழகுகிறார்கள் ! நாம் நாளெல்லாம் நின்று கத்திச்செய்யும் ஆர்ப்பாட்டங்களால் அதிகப்பட்சம் அன்று மாலை மழை வரலாம் ......... அவ்வளவே ! நமது மொட்டை போடுதல்களையும் தீச்சட்டி ஏந்துதல்களையும் சத்ரு சம்ஹார யாகங்களையும் முன்னெப்போதும் போலவே இப்போதும் அசுவாரசியமாய்ப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் கடவுள் ! நமக்கான தியாகிப்பட்டம் சுமந்துவரும் செய்தித்தாள்களின் தற்கொலைப் பெட்டிச் செய்திகள் காலப்பெருநெருப்பில் அழிந்து போகலாம் நம்மைப் போலவே .........! அப்போதும் இப்போதும் எப்போதும் .......... கைகட்டி வேடிக்கை பார்க்கவும...
ஓர் எளிய கவிதை " ச்சீ இவ்வளவு எளிய கவிதையா ? " என்று ஓர் எளிய கவிதையைப் புறக்கணிக்கிறேன் ! " ச்சீ இவ்வளவு கடின மனிதனா ? " என்று அக்கவிதை புறக்கணிக்கிறது என்னையும் .........!
புன்னகைக்காதவர்கள்  எதிரே வருகிற ஒரு தெரிந்தவன் புன்னகைப்பான் என எதிர்பார்க்கிறேன்...... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறான் ! எதிரே வருகிற ஒரு தெரிந்தவனான நான் புன்னகைப்பேன் என எதிர்பார்த்திருக்கக் கூடும் அவனும் .......... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறேன் ! எதிரே வருகிற நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம் என எதிர்ப்பார்க்கிறது புன்னகை ............ ஏமாற்றிவிட்டுக் கடந்து போகிறோம் ! ====================== ====================== ======================
ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க  வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்ன...
மழைக் கலைஞன் பரபரப்புக்கு மட்டுமே  பஞ்சமே வராத  அந்தப் பெருநகரத்துச்  சாலையில்  வான் பூக்களென  பெய்து கொண்டிருந்தது  மழை !  சாலையோரத்தில்  அவன்  சுருண்டு கிடந்தான்  தன்  ஒற்றைக் கையை  மழையில்  ஏந்தியபடி !  ஒரு  நவீன மழை ஓவியம்  போன்றுதான்  அந்தக்காட்சி  முதலில்  மண்டைக்குள் பதிந்தது !  கொஞ்சமிருந்த  சில்லறைகளில்  துன்பச்சங்கீதம்  இசைத்துக் கொண்டிருந்த  அந்த  ஒற்றைக் கையும்  மழைக்குளிரில்  நடுங்கிக்கொண்டிருந்த  ' என்புதோல் போர்த்த '  அந்த உடம்பும்  அவனொரு  ரத்தமும் சதையுமான  இல்லையில்லை ............  ரத்தமும் எலும்புமான  ஒரு உயிர் என்பதை  புத்தியில் அறைந்தன !  பரிதாபப்பார்வையும்  மிரட்சி நடையுமாகப்  பெண்கள் அவனைக்  கடந்து போயினர் !  குடைபிடித்து  வந்த ஒருவன்  அந்த  ஒற்றைக் கைக்கு  காசு போட்டுப்போனான்  ஏற்கனவே  அந்தக் கை  ...
சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற...