Skip to main content
















சிறுவயதில்
நூல்கட்டி விளையாடியதற்காய்
மன்னிப்புக்கேட்க வேண்டும் !
ஊசித்தட்டானே
நீ
எங்கிருக்கிறாய் ?

=============================

ஊரில்
பல்லாங்குழிச் சிறுமிகளையும்
கில்லித்தட்டு சிறுவர்களையும்
காணவில்லை !
திரும்பிப்பார்க்கிறேன் .......
என்னுடனே
வந்துகொண்டிருந்த
என் பால்யத்தையும்
காணவில்லை !

=============================

எங்களூரின்
தாவணிக்கனவுகள் எல்லாம்
இப்போது
சுடிதார்க் கனவுகளாக !
அந்தக்கனவில்
வண்ணம் இருந்தது !
இந்தக் கனவில்
சாயம் மட்டுமே இருக்கிறது !

=============================

கட்டிப்பிடித்துக்
கதற வேண்டும் போலிருந்தது !
பாலித்தீன் பைகளை
மேய்ந்து கொண்டிருந்த
எங்களூர்
பசுமாட்டை !

=============================

ஒரு
நோயுற்ற
முதியவளைப் போல
குற்றுயிராக
சுருண்டு கிடந்தாள்
காவிரி !

முடிந்தமட்டும்
கண்ணீர் வார்த்துத்
திரும்பிவந்தேன் !

=============================

இரட்டை மாட்டுவண்டியில்
கோவணங்கட்டிய
ஒரேயொரு விவசாயி
தென்பட்டான் !
கடவுளையே
பார்த்தது போலிருந்தது !

=============================

வீட்டில்
இரவு உணவுக்கு
இட்டிலி !
ம்ம்ம்..........
அரிசீம்பருப்புச் சோறை
அம்மாவே
மறந்து விட்டாள் !

=============================

சல்லடைபோட்டுத்
தேடியும்
அகப்படவேயில்லை
வீட்டில்
ஒரேயொரு
மஞ்சப்பை !

=============================

ஒரு
முற்பகல் முழுக்கத்
தட்டிப் பார்த்தேன்
எங்களூர்
வெட்டவெளியை !

கடைசிவரை
கதவு திறக்கவில்லை
தென்றல் !

=============================

மின்சாரம்
போனாலொழிய
வாசல்வந்து
கூடிப்பேசுவதில்லை
பக்கத்து வீட்டு
அக்காக்களும்
அண்ணன்களும் !

=============================

இற்றுப்போய்
எங்கள் வீட்டு
பரணில் கிடந்த
ஒரு முறத்தை
எடுத்து பத்திரப்படுத்தினேன் !
என் மகளுக்கு
புலிவிரட்டிய
ஒரு வீரத்தாய்
கதை சொல்ல !

=============================

சுற்றிச் சுற்றித்
தேடினேன் !
" எதைத் தேடுகிறாய் ? "
என்றாள் அம்மா !
" இங்கேயே
சுற்றிக்கொண்டிருக்கும்
இரண்டு சிட்டுக்குருவிகளை "
என்றேன் !

Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...