Skip to main content
நியூட்டனின் மூன்றாம் விதி




























நமது
போராட்டங்கள்
கேயாஸ் தியரிப்படி
இப்பிரபஞ்சத்தில்
ஏற்படுத்தும் விளைவுகள்
அவர்களுக்குப்
புறக்கணிக்கத்தக்கவை !

இஃது
இன்னோர் விடுமுறை
என்றுதான்
அவர்கள்
கடந்துபோகிறார்கள்
நமது
கடையடைப்புக்களை !

மூன்று
நாட்களுக்கு மேல்
பேருந்துகளை
முடக்கி வைத்தால்
அது
நமக்கே பதிப்பு
என்று அவர்களுக்கு
நன்றாகவே தெரியும் !

உண்ணாவிரதங்கள்
நமது
வயிற்றினில் ஏற்படுத்தும்
நீர்த்த அமிலங்களில்
அவர்கள்
நீச்சல் பழகுகிறார்கள் !

நாம்
நாளெல்லாம்
நின்று கத்திச்செய்யும்
ஆர்ப்பாட்டங்களால்
அதிகப்பட்சம்
அன்று மாலை
மழை வரலாம் .........
அவ்வளவே !

நமது
மொட்டை போடுதல்களையும்
தீச்சட்டி ஏந்துதல்களையும்
சத்ரு சம்ஹார
யாகங்களையும்
முன்னெப்போதும் போலவே
இப்போதும்
அசுவாரசியமாய்ப்
பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்
கடவுள் !

நமக்கான
தியாகிப்பட்டம்
சுமந்துவரும்
செய்தித்தாள்களின்
தற்கொலைப்
பெட்டிச் செய்திகள்
காலப்பெருநெருப்பில்
அழிந்து போகலாம்
நம்மைப் போலவே .........!

அப்போதும்
இப்போதும்
எப்போதும் ..........
கைகட்டி
வேடிக்கை பார்க்கவும்
இரும்புக்கரம் கொண்டு
அடக்கவும்
இருக்கவே இருக்கிறது
அவர்கள் வசம்
காவல்துறை !

இறுதியில் ........

போராடிப்போராடி
ஒருநாள் முற்றாக
ஓய்ந்து விடுவோம்
என்ற
அவர்கள் நம்பிக்கையை
நாம்
பொய்யாக்குவதில்லை !

என்ன .......
நாளை
அவர்களின்
நலம் வேண்டியும்
அவர்களுக்கே
அவர்களுக்காக நடக்கும்
மேற்கண்ட
அதே போராட்டங்களின்
அதே செயல்படாத்தன்மையில்
நியூட்டனின்
மூன்றாம் விதி
அவர்களுக்கும்
பொய்த்துப் போகலாம் !






Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது