Skip to main content
உன் மீது சில புகார்கள்


அடியே ,
காதலைக் கைது
செய்த நான் - இப்போது
காதலின் கைதியாகி நிற்கிறேன் !


தங்கத்தால்
செய்யப்பட்டதைத் தவிர
இந்த சிறைக்கம்பிகளுக்கு
வேறு சிறப்புகள் எதுவுமில்லை !


சிறகடித்து
சந்தோஷமாகப்
பறந்து கொண்டிருந்தேனடி !
எனது
இறக்கைகளை வெட்டிவிட்டு
கால்களைக் கட்டிவிட்டாய் !
பறக்கவும் முடியாமல்
நடக்கவும் முடியாமல் நான்
நொந்து நொந்து
நூலாகிறேன் !
வெந்து வெந்து
வீணாகிறேன் !


விடுதியில் இருக்கிறாய் நீ !
வீட்டில் இருக்கிறேன் நான் !
சாலையில் நடப்பதைப்போன்றது
உன் நிலை !
கம்பி மீது நடப்பதைப் போன்றது
என் நிலை !
உனக்காக நான்
விழுந்து எழுந்து
எழுந்து விழுந்து
விழுப்புண்கள் பெற்றாலும்
விருப்பத்தோடு உன்
விருப்பம் நிறைவேற்ற
விழைகிறேன் !
நீயோ
உனக்கான சாலையில்
எனக்காக நடப்பதற்கே
சிரமாயிருக்கிறது என்கிறாய் !
எந்த ஊர் நியாயம் இது ?


பக்கத்து வீட்டுக்காரனைப்
பலநாட்களாகத் தெரியும் !
ஈன்றெடுத்த
பச்சிளம் குழந்தையைப்
பத்து நாட்களாகத்தான் தெரியும் !
அதனால்
பக்கத்து வீட்டுக்காரனே
பெரிதும் உயர்ந்தவன் என்று
பைத்தியகாரன் கூடப்
பிதற்ற மாட்டான் !
உனது
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக
பச்சிளம் குழந்தை என்னைப்
பரிதவிக்க விடாதே !


காதலிக்க
என்னைத் தேர்ந்தெடுத்தது
தவறு என்று
நினைக்கிறாய் தானே !
நானும் உன்னை
அப்படித்தான் நினைக்கிறேன் !
ஆனால் ,
நான் உன்னையோ
நீ என்னையா
தேர்ந்தெடுக்க வில்லை
காதல் தான் நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது !
அதை முதலில்
தெரிந்து கொள் !


நீ உனது
பிற ஆண் நண்பர்களோடு
பேசுவதைத் தவறு என்று
சொல்ல மாட்டேன் !
ஆனால்
இந்த முனையில் நான்
காத்துக் காத்துத்
தவித்துக் கொண்டிருக்க ,
அந்த முனையில் நீ
வேறு எதோ ஒரு முனையோடு
முனைப்பாக
வறுத்துக் கொண்டிருப்பதைத்தான்
பொறுத்துக் கொள்ளமுடியவில்லை
என்னால் !


உன்னோடு
நடக்கையில்
எதிரில் அழகான பெண்
வந்தால் ,
நான் தலைகுனிந்து
கொள்வதையும் ,
அழகான ஆண்
எவனாவது வந்தால்
நீ பார்க்கிறாயா என்று
பார்க்காமல்
பெருந்தன்மையோடு நான் வருவதையும்
பார்த்து என்னை
கேணப்பயல் என்று மட்டும்
நினைத்து விடாதே !


முன்பெல்லாம்
வணக்கம் சொல்லி
ஆரம்பிக்கும் நம் பேச்சு ,
வளர்ந்து வளர்ந்து
வான் முட்டும் !
இப்போதோ வெறும்
வணக்கத்தோடு
முடித்துக் கொள்வதே உனக்கு
இணக்கமாய் இருக்கிறது !

எனது இனிமைகள்
அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்து விட்டு
சக்கையான என்னைத்
தூக்கியெறிய நீ நினைத்தால்
மன்னித்து விடு ,
நாம் இதுவரை செய்ததற்குப்
பெயர் காதல் இல்லை !!!







Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...