Skip to main content
கவிதை செய்தல்




உயிரை உருக்கித்


தயாரிக்கும்


உணர்வின் இரசம் !




மூளையைப் பிழிதெடுக்கும்


மொழிச்சாறு !




உணவுண்ணும் போதும்


கனவுண்ணும் கைங்கர்யம் !




கற்பனையின் ,


கையில் அகப்பட்டது


கைவிட்டுப் போகாதிருக்க


கையோடு இருக்கும்


கைக்குறிப்பு !




குளியலறையிலும்


குதித்தாடும் சிந்தனைகள் !




பணிநடுவிலும்


அணிவகுக்கும் அழகுணர்ச்சி !




சக மனிதனின்


சூழல் திருடும் சாமார்த்தியம் !




உலகப் படைப்புகளில்


ஊழல் செய்யும் சாணக்கியம் !




ரகசியங்களை


ரசனைப் படுத்தும் ரசாயனம் !




பழமையைப் புறந்தள்ளும்


பௌதிகம் !




பிறப்பெடுத்த மலர்ச்சியிலும்


பிரசவித்த அயர்ச்சி !




புத்தி சொல்லும் கேனத்தனம்


புத்தி இழக்கும் ஞானத்தனம் !




உணர்ச்சிக்கு


வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான


புணர்ச்சிக்கு


படுக்கை விரிக்கும் மெத்தை !




எண்ணங்களின் வானவில்லுக்குப்


பேனாவால் மழை பொழிதல் !




உண்மையின் அந்தரங்கம் மறைக்க


பொய்யால் ஆடை நெய்தல் !




ஒரே ஒரு வார்த்தைக்கும்


வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !




பாலையில் சோலை தேடுதல்


சோலையில் பாலை தேடுதல் !




எண்ணங்களின் கோலத்திற்கு


வார்த்தைகளால் வண்ணமிடுதல் !




அறிவு என்னும் தறி கொண்டு


வரி எனும் நூல் கொண்டு


மொழிப்பெண்ணின் மானம் காக்க


சேலை நெய்யும் கலை !




கவியில் வாழாத நாட்கள் ,


புவியில் வாழாத நாட்கள் !




யாசித்ததை வாசித்து


வாசித்ததை நேசித்து ,


நேசித்ததை யோசித்து ,


யோசித்ததை வேசித்து


வேசித்ததை .....................


ச்சே ! இதற்கு மேல்


எதுகை எட்டவில்லை


விட்டு விடுங்கள் !




இதைப் பற்றி


சொல்லிக்கொண்டே போனால் ,


இது ஒரு


முடியாத முடிவிலி !




இதை ,


இப்போதைக்கு


நிறுத்தி வைக்கும் நான் ஒரு


" முடியாத " அறிவிலி !!!




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது