Skip to main content
பிழைப்பு


மூன்று மணிக்கு

முந்தி எழுந்து ,


காபி குடித்து

கண்ணுறக்கம் தொலைத்து ,


காலைக் கடன்களைக்

கடிதே முடித்து ,


வெள்ளாவி வெந்நீரை

விரலிடுக்கில்

விளாவிக் குளித்து ,


அழுக்கு சீருடையை

அலுக்காமல் அணிந்து கொண்டு ,


தூக்கத்தில் திளைக்கும்

அறை நண்பனை

ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ,


கலைத்து விடாமல்

கதவைச் சாத்தி ,


வெளியே வந்து

விதியை நொந்து ,


நிறுத்தத்தில்

நின்றபடியே

நேரம்போகக் காத்திருந்து ,


தொழிற்ச்சாலை ஊர்தியில்

சிறைச்சாலைக் கைதி போல ,


விடுபட்ட உறக்கத்தை

வழிநெடுக விரட்டிப் பிடித்து ,


வளாகம் வந்ததும்

விரைந்து இறங்கி ,


வரிசையில் நின்று

வருகையைப் பதிந்து ,


அதிகாலை இட்டிலியை

அரைவயிற்றில் அடைத்து விட்டு ,


இரவுப் பணியாளனிடம்

இறுதி நிலவரம் இயம்பக் கேட்டு ,


விட்டுப் போன பணிகளைத்

தொட்டுத் துலக்கி தூசி தட்டி


சமயம் வாய்த்தபோது

சாயவிருக்கையில் சாய்ந்துறங்கி ,


போன பொழுதுணர்ந்து

பதறி எழுந்து ,


பாதிப் பணியின்

மீதி முடித்து ,


மேலதிகாரியின்

முறைப்பை

முகத்தில் வாங்கி ,


ஓய்வு இன்றி

ஆய்வு செய்து ,


உடல் நோக

உள்ளம் சாக ,


இட்ட வேலையை

ஓட்ட முடித்து ,


வசதி வாய்த்தால்

வம்பு பேசி வம்பு வளர்த்து ,


அந்தி சாய்வில்

அலுவல் முடித்து ,


அயர்ந்து போய்

அறைக்குத் திரும்பி ,


தானே சமைத்து

தானே உண்டு ,


திரும்பவும் படுத்து

திரும்பவும் எழுந்து ,


மற்றுமொரு நாளை

மறுபடியும் தொடங்கி ,


...............................................

...............................................

...............................................


இப்போதெல்லாம்

தெரு நாயைப் பார்த்தால் கூட

சற்று பொறாமையாய் இருக்கிறது !!!

















Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது