Skip to main content

Posts

புன்னகைக்காதவர்கள்  எதிரே வருகிற ஒரு தெரிந்தவன் புன்னகைப்பான் என எதிர்பார்க்கிறேன்...... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறான் ! எதிரே வருகிற ஒரு தெரிந்தவனான நான் புன்னகைப்பேன் என எதிர்பார்த்திருக்கக் கூடும் அவனும் .......... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறேன் ! எதிரே வருகிற நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம் என எதிர்ப்பார்க்கிறது புன்னகை ............ ஏமாற்றிவிட்டுக் கடந்து போகிறோம் ! ====================== ====================== ======================
ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க  வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்ன...
மழைக் கலைஞன் பரபரப்புக்கு மட்டுமே  பஞ்சமே வராத  அந்தப் பெருநகரத்துச்  சாலையில்  வான் பூக்களென  பெய்து கொண்டிருந்தது  மழை !  சாலையோரத்தில்  அவன்  சுருண்டு கிடந்தான்  தன்  ஒற்றைக் கையை  மழையில்  ஏந்தியபடி !  ஒரு  நவீன மழை ஓவியம்  போன்றுதான்  அந்தக்காட்சி  முதலில்  மண்டைக்குள் பதிந்தது !  கொஞ்சமிருந்த  சில்லறைகளில்  துன்பச்சங்கீதம்  இசைத்துக் கொண்டிருந்த  அந்த  ஒற்றைக் கையும்  மழைக்குளிரில்  நடுங்கிக்கொண்டிருந்த  ' என்புதோல் போர்த்த '  அந்த உடம்பும்  அவனொரு  ரத்தமும் சதையுமான  இல்லையில்லை ............  ரத்தமும் எலும்புமான  ஒரு உயிர் என்பதை  புத்தியில் அறைந்தன !  பரிதாபப்பார்வையும்  மிரட்சி நடையுமாகப்  பெண்கள் அவனைக்  கடந்து போயினர் !  குடைபிடித்து  வந்த ஒருவன்  அந்த  ஒற்றைக் கைக்கு  காசு போட்டுப்போனான்  ஏற்கனவே  அந்தக் கை  ...
சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற...
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி   காற்றெனும் சமுத்திரத்தில் வாழும் மீன்களென மீன்கள் நம்மை நினைத்துக் கொண்டிருக்கலாம் ! ஆனால் எந்த மீனும் இங்கே வந்து மீன் பிடிப்பதில்லை ! =============================== உங்கள் முன்பு தென்படும் நம்பிக்கை என்ற கூட்டில் எந்தப் பறவையாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம் ! உண்மை என்ற கல்லெறிந்து விடாதீர்கள் ! =============================== அழகாயிருந்தது  என்றாலும் வந்து தொலைக்காமலேயே இருந்திருக்கலாம் , ஏற்கனவே யாரோ எழுதிவிட்டது போலத் தோன்றிய நானெழுதிய அந்தக் கவிதை ! =============================== சுவையாக இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன சூடாக இருக்கும் உணவுகள் ! =============================== மருத்துவனாவேன் என்றான் ஒருவன் ! பொறியாளனாவேன் என்றான் ஒருவன் ! விஞ்ஞானியாவேன் என்றான் ஒருவன் ! விவசாயியாவேன் என்றான் ஒருவன் ! நான் ஓடிச்சென்று அந்த வருகால விவசாயியைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினேன் ! நாளையவன் வளர்க்கப் போகும் நெற்கதிருக்கு என் கண்ணீர் உரமாகட்டும் ! ================================ ஒற்றை பிராமணனும் ஒரு விதவையும் எதிரெதிரே கடந்து போனார்க...
அது எதோவொரு நாளில் அது எனக்கு அறிமுகமானது ! அன்றிலிருந்து அது எனக்கு உற்ற நண்பன் ! யாராவது அதைச் சீண்டினால் எனக்கு பொல்லாத கோபம் வரும் ! திடீரென்று ஒருநாள் அது என்னைத் தாண்டி வளர்ந்து நின்றது ! அது சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்தேன் ! எனக்கே தெரியாமல் நானதன் அடிமையானேன் ! தனக்கான பெருந்தீனியை கொண்டா கொண்டா என நாலாப்புறமும் அது என்னை விரட்டியது ! அதைத் திருப்திப்படுத்துவதே என் வாழ்நாள் இலக்கானது ! சில தனிமைகளில் அது பூதாகரமாக என்னைப் பார்த்துச் சிரிக்கும் ! பயமாக இருக்கும் ! என் நண்பர்கள் அதைக் கொன்றுவிடும்படி சொன்னார்கள் ! ஆகவே, நானதைப் பட்டினி போட ஆரம்பித்தேன் ! பசியால் அது துடித்தது ! சிறுகச்சிறுக அதைக் கொன்று விட்டதாய் நண்பர்களிடம் சொன்னேன் ! ஒருநாள் என் மனதின் பாதாள அறைதிறந்து உள்ளே சென்றேன் ! அங்கே, சாதுவாய் அது அமர்ந்திருந்தது ! அதற்கான உணவை அளித்துவிட்டு " பயப்படாதே நானிருக்கிறேன் " என்றேன். ! அது புன்னகைக்க ......... நானும், அதுவாகிய நானும் கைகுலுக்கிக் கொண்டோம் !
   இலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம்  களிமண் இருந்தது ! ஒரு பொம்மை செய்ய  ஆசைப்பட்டேன் ! பொம்மை செய்பவர்களின்  உலகத்தில்  சில கருத்துக்கள்  நிலவிவந்தன ! பொம்மை  புன்னகைக்க வேண்டும்  என்றொரு கருத்து ! ஆகவே,  பொம்மைக்கு  புன்னகையை அளித்தேன் ! கண்களில்  உயிர்ப்பு கொண்டதுதான்  பொம்மை  என்றொரு கருத்து ! கொஞ்சம் முயன்றதில்  பொம்மையின்  கண்கள்  உயிர்ப்படைந்தன ! வண்ணமில்லாதது  பொம்மையில்லை  என்றது  ஒரு கருத்து ! சற்றே  மெனக்கெட்டதில் வண்ணத்தில்  ஜொலித்தது  பொம்மை ! கொஞ்சமாவது  உடைந்து  அழுக்கானால்தான்  அது பொம்மை  எனுமொரு கருத்து ! அவ்வாறே  ஆனது பொம்மையும் !  இப்போது  பொம்மை,   பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக  உருவெடுத்திருந்தது !  ஆனால், அது  என் பொம்மையாக  இருக்கவில்லை !