Skip to main content

Posts

விளையாடிப் பார்க்கலாம் வா வாலிபா கேள் ! நீ குருடனல்ல இ ருட்டில் இருக்கிறாய் அவ்வளவு தான் ! நீ முடவனல்ல காயம் பட்டவன் - அதை காலம் ஆற்றி விடும் கவலை ப்படாதே ! கதவு சாத்தியிருக்கிறது என கைகட்டி நிற்காதே ! ஒரு முறை தட்டிப் பார் ! அது பூட்டப்படாமல் கூட இருக்கலாம் ! இரண்டு அடிகளை மட்டும் நீயாக எடுத்து வை ! மூன்றாவது அடிக்கு முயற்சி இல்லாமல் முன்னேறி இருப்பாய் ! வெற்றிக்கான படிகட்டுகள் மொத்தமே நூறு ! ஒரே ஒரு எட்டு வை ! நீ நின்றிருப்பது தொண்ணூற்றி ஒன்பதாவது படிகட்டாகக் கூட இருக்கலாம் ! உனது ச ோகத்தின் ஈரங்கள் த ாமரைத் தண்ணீர் போல தொலையட்டும் ! அவை தந்த பாடத்தின் சுவடுகள் பசுமரத்து ஆணிபோல பதியட்டும் ! மரத்தடிகள் இளைப்பாற மட்டுமே ! தங்கு வதற்கு அல்ல . முன்னேறி நடந்து பார் மாளிகைக்கே மன்னனாவாய் ! காதல் என்பது இளமையின் போதை மாத்திரை ! அதன் விலையும் அதிகம் ! விளைவுகளும் அதிகம் ! எச்சரிக்கையாய் இரு ! வெள...
குறிப்பு : தமிழும் , தமிழ் கவிஞர்களும் என்னை மன்னித்து விடுங்கள் கவிதை எழுதுவது எப்படி ? அது ஒன்னும் பெரிய பிரமாதம் கிடையாது ! " ௮ " வுக்கு " ௮ " போடு ! " க " வுக்கு " க " போடு ! " ஒ " வுக்கு " ஒ " போட்டா ஓஹோன்னு இருக்கும் ! அது மாதிரியே மைக்கு மை ! பைக்கு பை ! என்ன புரியலையா ? அன்பேன்னு ஆரம்பிக்கறியா அடுத்ததா ஆட்டுக்குட்டியேன்னு அடிச்சு விடு ! அம்மான்னு தொடங்கினா சும்மான்னு முடி ! மகிழ்ச்சின்னா நெகிழ்ச்சி , முகிழ்ச்சி ....... இடையில இகழ்ச்சியக்கூட இழுத்து வுட்டுக்கலாம் ! " வாடா மச்சி " க்கு இருக்கவே இருக்கு " வாழக்கா பச்சி " ! காதல்ன்னா , கனவு , கற்பனை , கன்றாவி , கசுமாலம் ........ கடைசியா மோதலையும் , சாதலையும் மறந்துடாத மவனே ! பொம்பளையப் பாடுறியா மரஞ்செடி கொடியில ஆரம்பிச்சு மாங்கா , தேங்கா வரைக்கும் சும்மா தோரணம் கட்டித் ...
குறிப்பு : கொஞ்சம் மொக்கையாக இருக்கும் . ஆனாலும் அலுவலக நண்பர்களுக்காக ................................... என் அலுவலகக் கட்டைகள் கட்டுடலைப் பொருத்தமட்டில் கர்ணா ஒரு கர்லாக் கட்டை ! பிரதீஷ் , உருவத்தால் உருட்டுக்கட்டை ! உள்ளத்தால் உன்னதக்கட்டை ! மனோஜ் , மனதைப் பொறுத்தவரை மணமணக்கும் சந்தனக்கட்டை ! பீட்டர் , நிறத்தால் கரிக்கட்டை எனினும் வருங்காலத்தில் வைரமாகப் போகிறவன் ! அருள் முருகன் , அன்பால் ஒட்டிக்கொள்ளும் அரக்குக் கட்டை ! கௌரி சங்கர் , அறிவில் முதிர்ந்து அன்பில் கனிந்த கிழட்டுக்கட்டை ! மாணிக்கராஜ் , நல்லோர்க்கெல்லாம் நேர்மையான நாட்டுக்கட்டை ! தினேஷ் குமார் , தரத்தைப் பொருத்தமட்டில் தகுதி குறையாத தங்கக் கட்டை ! தினேஷ் , தோல்விகளைத் தாங்கித் துடைக்கும் துடைப்பக்கட்டை ! ராமதாஸ் வேலை என்று வந்துவிட்டால் விட்டுக்கொடுக்காத விசுவாசக் கட்டை ! கருஜகன் , கண்கவர் அழகிகளுக்கு கச்சிதமான காமக் கட்டை ! ஹரி ஹரன் , கன்னிப்...
காதல் ......... வாலிபத்தின் பூஞ்சோலை - இது வசந்தத்தின் தொழிற்ச்சாலை ! இளமையின் பூமாலை - இது இதயத்தின் பாமாலை ! நினைவுகளின் நெடுஞ்சாலை - இது உள்ளங்களின் உருக்காலை ! கவிதையின் கடலலை - இது புதுமையின் பண்பலை ! கற்பனையின் கரும்பாலை - இது காமத்தின் காமாலை ! புத்துணர்வின் தேயிலை - இது புனிதத்தின் மாவிலை ! உணர்வுகளின் மாமலை - இது உறங்காத எரிமலை ! பொழுதுகளின் பொன்மாலை - இது தனிமைகளின் தார்பாலை ! நெகிழ்ச்சியின் நீரலை - இது மகிழ்ச்சியின் காற்றலை ! சுகந்தத்தின் சூழ்நிலை - இது வெளிச்சத்தின் விடிகாலை !!!
Note : This poem is based on the spectrum broad band issue ............................ விரைந்து வருவாயா தலைவா ? தோரணங்களில் நீ சிரிக்க எனக்கு காரணங்கள் தேவையில்லை ! நீ சிரிக்க வேண்டும் ! அது போதும் ! நீ மேடைகளில் முழங்கும்போது - உனக்கு மாலை போட முண்டியடிப்பவன் நான் ! என்னை உனக்குத் தெரியாது எனக்கு உன்னை மட்டுமே தெரியும் ! உனக்கு வணக்கம் சொல்லாமல் எனக்குப் பொழுதுகள் விடிவதில்லை ! உன்னை வாழ்த்திப்பாடாமல் என் இரவுகள் இனிப்பதில்லை ! தலைவன் என்று நீ வந்துவிட்டதால் , இறைவன் என்று எவன் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் ! என் வீட்டில் ஒருவேளை அடுப்பு எரிந்தாலும் , அரிசியில் உன் முகத்தையே தரிசிக்கிறேன் ! குடிசையில் நான் இருந்தாலும் - நீ கோபுரத்தில் வாழ வேண்டும் ! மண்தரையில் நான் படுத்தாலும் - நீ மலர் மஞ்சத்தில் உறங்கவேண்டும் ! என்னைப் பொறுத்தவரை , மாநாடுகள் தான் மகிழ்ச்சியான திருநாள்கள் ! பொதுக் கூட்டங்கள் தா...