Skip to main content
 சிறைவாசி





அவன்
சிறையில் இருந்து
வெளிப்பாட்டான் !

அவனுக்கு
அன்று
விடுதலை !

குற்றம் ?

நிதி
அவனை
மோசடி செய்தது !

எனவே

நிதியை
அவன்
மோசடி செய்தான் !

பலநாள் திருடன்
ஒருநாள்
அகப்படுவான் !

இவன் ,

சிலநாள் திருடன்
சீக்கிரம்
அகப்பட்டான் !

வாதாட
இவனிடம்
நிதியில்ல்லை !
எனவே
நீதி வென்றது !

சிறை,
இவனுக்கு ஆனது
அறை !

ஆறுவருடம்
சிறையில்
வனவாசம் !
இப்போது
தண்டனை முடிந்து
மீண்டும் இவனுக்கு
ஜனவாசம் !

வெளியே
வெயிலடித்தது !

அடுக்கிவிட்டது போல்
கட்டிடங்கள் !
முடுக்கிவிட்டது போல் 
வாகனங்கள் !

இவன்
வீடுசென்ற போது

சகோதரன்
செருப்ப்பைக் காட்டினான் !

தகப்பன்
தவறிவிட்டான் !

தாய்
முதியோர் இல்லத்தில் !

உறவுகள்
ஒன்றுகூடிக்
காறித்துப்பின !

அக்கம்பக்கத்தார்
அகதியைப் போலப்
பார்த்தனர் !

வேலைதேடிச்
சென்றவிடத்தில்
விரட்டியடிக்கப்பட்டான் !

அடுத்தவேளைச் சோறு
கேள்விக்குறியானது !

பிச்சையெடுப்பது குறித்து
மனதுக்குள்
பரிசீலித்தான் !

அதற்கு
சிறை செல்வதே
கௌரவம் என்று
தோன்றியது !

செய்ய
வேலை !

உண்ண
உணவு !

உடுக்க
உடை !

உறங்க
உறைவிடம் !

என்ன
தனிமை தான்
வாட்டும் !

இப்போதுமட்டும் என்ன
வாழுகிறதாம் !

இப்படியாக
இரண்டு நிமிடங்கள்
யோசித்தவன்

பக்கத்திலிருந்தவன்
பணப்பையைப்
பிடுங்கிக் கொண்டு 
வேகமாக
ஓடத் தொடங்கினான் !

அவன் நோக்கம்
திருடுவது அல்ல !
சிறை செல்வது !!!





Comments

  1. நல்லவனையும் சமூகம் மாற்றிவிடுவது கொடுமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது